பக்கம் எண் :


60


நல் அக வனம் முலைக் கரைசேர்பு மல்கு புனல் பரந்த - நல்ல மார்பின்கணுள்ள அழகிய முலைமுகட்டில் விழுந்து பரக்கும்படி மல்கிய கண்ணீர் பரந்தன; ஆதலின் நீ வருமளவும் எவ்வாறு ஆற்றியிருக்குந் தன்மையள்? எ - று.

    (வி - ம்.)முரம்பு-வன்னிலம்; பருக்கைக்கற்கள் நிரம்பிய மேட்டு நிலமுமாம். படு - மடு. நோக்கி யென்பதை நோக்கவெனத் திரிக்க. அடைந்த பரந்த மாலை - அடைதலாற் பரவிய மாலை யெனக்கொள்க. ஆதலினென்பது முதற் குறிப்பெச்சம். விம்முறு கிளவியள் என்றது துன்பத்துப் புலம்பல்.

    இறைச்சி :- ஆறலைகள்வர் அதர்பார்த்து ஒளிந்திருத்தல் போலத் தலைவன் பிரிவை நோக்கிப் பசலை யொளிந்திருக்கும்; அவன் பிரிதலும் அது பரந்து நலத்தைக் கெடுக்குமென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.

    (பெரு - ரை.) குறைக்கூணல்லில் என்றும், குறைத்தூணல்லில், என்றும் பாடபேதமுள்ளன. இவற்றுள் குறைத்தூண் என்பதற்கு, குறையுடையதாகிய ஊண் என்னலாம்.

(33)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, தோழி தெய்வத்துக் குரைப்பாளாய் வெறி விலக்கியது.

    (து - ம்.) என்பது, களவுக்காலத்துப் பிரிவிடை வேறுபட்ட தலைவியை நோக்கி இவள் முருகனால் அணங்கப்பட்டாளென்று அன்னை வெறியெடுப்பக் கண்ட தோழி, அறத்தொடு நிற்பாளாய் வெறிவிலக்குமாறு நாடனது மார்பினால் வந்த இந்நோய் நின்னாலணங்கப்பட்டதன்றென்பதை நீ யறிந்து வைத்தும் நின்னணங் கென்று விளிப்பதற்காகப் பலியேற்க வருவையெனில் நீ யறிவில்லாதவனென்று முருகனை நோக்கி இழந்து கூறா நிற்பது.

    (இ - ம்.) இதற்கு "களம் பெறக் காட்டினும்" (தொல்-கள, 23) என்னும் விதி கொள்க.

    
கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த 
    
பறியாக் குவளை மலரொடு காந்தள் 
    
குருதி யொண்பூ உருகெழக் கட்டிப் 
    
பெருவரை யடுக்கப் பொற்பச் சூர்மகள் 
5
அருவி யின்னியத் தாடு நாடன் 
    
மார்புதர வந்த படர்மலி யருநோய் 
    
நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து 
    
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி