பக்கம் எண் :


602


     (வி - ம்.)நாகரிகர் - கண்ணோட்ட முடையவர். இக் கருத்து "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டுபவர்" (குறள் - 580) என்பதன்கண் எடுத்தாண்டமை யறிக.

     வாழை மடலிலுள்ள இனிய நீரை மந்தி பருகும் நாடனாயிருந்தும் அதுபோல இவளது நலனை நுகர நீ விரும்பினாயல்லையே, இஃதென்னையென வேறுமொருபொருள் தோன்றி நின்றது. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஆற்றாதுரைத்து வரைவுகடாதல். இதன், 'முந்தையிருந்து . . . . . . நனிநாகரிகர்' என்னும் இரண்டடிகளும் பெருங்கதையில் வந்துள்ளன.

     (பெரு - ரை.) வாழைப் பூவிற்கு மடந்தை முலையும் காந்தட்பூவிற்கு அவள் கையும் மந்திக்குப் புதல்வனும் தீநீர்க்குப் பாலும் உவமைகள். 'தோள் துயில் இன்புறாய்' என்றது, நீ இவளை வரைந்து கொண்டு நின்மனைக்கண் இவள் தோளின்கண் இடையூறின்றித் துயில்வதனை இன்பமாகக் கொள்கின்றிலை என்றவாறு.

(355)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

     (து - ம்.)என்பது, தலைமகன் அந்தணர், சான்றோர் முதலாயினாரொடு வரைவு வேண்டி வருதலும் தலைமகளின் தமர் உடன்படாமை கண்டு அவன் தனது நெஞ்சை நெருங்கி, 'என் நெஞ்சமே! இதுகாறும் நீ வருந்தியதனை யான் அறிவேன் காண்; இங்ஙனம் வருந்தியதன் பயனாகவேனும் நம் காதலி நம் அருகிலே வைகுமாறு கிடைப்பளோ? ஒன்று கூறுவாயாக'வென்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பரிவுற்று மெலியினும்" ('தொல். கற். 12) என்னும் விதிகொள்க.

    
நிலந்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த 
    
விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் 
    
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி 
    
வானர மகளிர்க்கு மேவல் ஆகும் 
5
வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் 
    
அசைவில் நோன்பறை போலச் செல்வர 
    
வருந்தினை வாழியென் உள்ளம் ஒருநாள் 
    
காதலி உழையள் ஆகவும் 
    
குணக்குத்தோன்று வெள்ளியின் எமக்கும்ஆர் வருமே. 

     (சொ - ள்.)என் உள்ளம் வாழி - என் உள்ளமே! நீ வாழ்வாயாக!; நிலம் தாழ் மருங்கின் தெள் கடல் மேய்ந்த - நிலத்தின் கண்ணே ஆழ்ந்த இடத்தினையுடைய தெளிந்த கடலருகு சென்று இரைதேடி