பக்கம் எண் :


610


தன் துதிக்கையிடை வைத்ததனை மெய்யின்மேல் வாரி இறைத்துக் கொள்ளுகின்ற யானைக்கன்றுக்கு இட்ட கவளம்போல; நனி பெரிது உற்ற நின் விழுமம் உவப்பேன் - மிகப் பெரிதாக நீ யுற்ற நின் சீர்மையை யான் கண்டு மகிழா நிற்பேன்; மனை மடி துயில் மற்றும் கூடும் - நீ மனையின்கண் வந்து துயிலுகின்ற துயிலானது பிறிதொரு பொழுதினுங் கூடும்; முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய - ஆதலால் மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து போமாறு முறையே கூத்துக்களை ஆடிய; விழவு ஒழி களத்த பாவை போல - திருவிழா வொழிந்த களத்திலுள்ள கூத்தியைப்போல; நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி -அழகுடைய நேற்றைப் பொழுதிலே வந்து நின்னை முயங்கிய பரத்தையருடைய புதிய நலனை யெல்லாங் கொள்ளை கொண்டு; இன்று தரும் மகளிர் மெல்தோள் பெறீஇயர் - இற்றை நாளால் பாணனாலே கொணர்ந்து தரப்படுகின்ற பரத்தையருடைய மெல்லிய தோளை அணையும் வண்ணம்; செல் - விரைந்து செல்வாயாக!; நின் பரத்தை சிறக்க - நின்னொடு நின் பரத்தை நீடு வாழ்வாளாக! எ - று

.

     (வி - ம்.) புலர்ந்து - புலரவெனத் திரிக்க. நாணி - உற்ற விழுமமென்க. காழ் - இருப்புமுள். முனி - யானைக்கன்று அது கவளத்தை மேலே வாரியிறைத்துக் கொள்ளுதல் போல வெட்கமின்றி நீ மேலே போகட்டுக் கொண்ட பழிச் சொல்லை யான் கண்டு மகிழ்வேனென்க. விழுமம் - இகழ்ச்சிக் குறிப்பு.

     நீ இங்ஙனம் இகப்பினும் மனையின் கண்ணிருந்தே மடிதுமாதலின், நீ விரும்பிய வண்ணம் வந்தொழுகற் பாலையென்பாள் மனைதுயில் மற்றுங் கூடும் என்றாள். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின் மறுத்தல்.

(360)
  
     திணை : முல்லை.

     துறை : இது, வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் வேற்று நாட்டுச் சென்று வந்துழி, அவன் குறித்த பருவம் கடந்ததனாலே தலைவி துனிகூருமென்ற வாயில்களை நெருங்கித் தோழி 'நீயிர் கவல்வதென்னை? அவனது தேரைக் குதிரைகள் கொண்டுவந்து தந்தன; அதுகண்ட இறைவி தானடைந்த துன்பமெல்லாம் நீங்குதலாலே விருந்தேற்கும் விருப்பினளாய் இராநின்றன'ளென உறழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும்" (தொல். கற். 9.) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனாற் கொள்க.

    
சிறுவீ முல்லைப் பெரிதுகமழ் அலரி 
    
தானுஞ் சூடினன் இளைஞரும் மலைந்தனர்