பக்கம் எண் :


621


கடைஇ வருவர் - விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக் கொண்டு இன்னே வருகுவர்; ஆதலின் வருந்தாதே கொள்! எ - று.

     (வி - ம்.)சிறுகுடிபோன்ற அரிவையெனினுமாம்.

    வினைமுடித்த மகிழ்ச்சிகூறக் கேட்டவளவே ஆற்றுமாதலின் அது தோன்ற வீரர் மலர்சூடிவந்தன ரென்றாள். அவ் வினை முடித்தலிற் சோர்விலரென்பது குறிப்பிப்பாள் பரியாது வருவரென்றாள்.

     உள்ளுறை :-காக்கையின் பெடை தன் பார்ப்பைத் தழுவிக் கொண்டு சோற்றுப்பலியைக் கவரவேண்டிக் கிளையையழைத்து மனையின்கண்ணே சூழ்ந்திருக்குமென்றது, நீயும் நின்மகவைத் தழுவினையாகிக் கேள்வன் கொணருகின்ற நிதியத்தை ஆர்த்துமாறு சுற்றத்தாரை யழைத்துச் சூழ இருத்தி மனையறம் நிகழ்த்துவாயாக என்றதாம். கைகோள் - கற்பு. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) அருமன் - சிறுகுடி என்னும் ஊரிலுள்ள பெருங்குடித் தோன்றல்; இவனைக் 'கள்ளில் ஆத்திரேயனார் என்னும் நல்லிசைப் புலவரும்' "ஆதியருமன் மூதூ ரன்ன" எனப் பாராட்டியிருத்தலைக் குறுந்தொகை (2")க்கண் காண்க.

(367)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி தலைமகற்குச் செறிப்பறிவுறீஇயது.

     (து - ம்.) என்பது, தலைமகன் வரையாது நெடுங்காலம் பகல்வந் தொழுகுவது கண்ட தோழி, அவன் விரைய மணஞ்செய்துகொள்ளுமாறு நெருங்கி ஐயனே! உம்மோடு யாம் கிளிகடிந்து ஊசல்தூங்கி அருவியாடி வருவதினும் இனியதொன் றில்லையாயினும், அதனால் எமக்குண்டாகிய புதுமண முதலாயவற்றை அன்னை நோக்கிச் சுட்டி உயிர்த்துச் சீறாநின்றனள்; அதனையஞ்சி யாம் இல்வயிற்செறிப்புற்று இரங்கத்தக்கேம் ஆயினேம் என்று நொந்து கூறாநிற்பது.
    
பெரும்புனங் கவருஞ் சிறுகிளி ஓப்பிக் 
    
கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக 
    
கோடேந்து அல்குல் தழையணிந்து உம்மோடு 
    
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ 
5
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த 
    
வெறிகமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய 
    
பசலை பாய்தரு நுதலும் நோக்கி 
    
வறிதுகு நெஞ்சினள் பிறிதொன்று சுட்டி 
    
வெய்ய உயிர்த்தனள் யாயே 
10
ஐய அஞ்சினம் அளியம் யாமே.