பக்கம் எண் :


630


அவிழ்ந்த கணி வாய் வேங்கை - அச்சஞ் செய்யும் மலைப்பக்கத்திலுள்ள அருவியாடிக் கரிய நிறத்தையுடைய அரும்பு மலர்ந்த சோதிடம் வல்லார் போன்ற வேங்கை மரத்தின்மேலே கட்டிய; பா அமை இதணம் ஏறி - பரப்பமைந்த பரண்மீது ஏறி; வணர்குரல் சிறுதினைப் பாசினம் கடிய - வளைந்த கதிர்களையுடைய சிறிய தினைப்புனத்தின்கண்ணே வருகின்ற பசிய கிளியினத்தைக் கடிந்து போக்குமாறு; நாளையும் நமக்கும் புணர்வதுகொல்லோ - இன்றிருந்தது போல நாளையும் நமக்குப் பொருந்துவதாமோ? அங்ஙனம் பொருந்தாது போலும்; எ-று.

     (வி - ம்.) வேங்கை அரும்புங் காலம் தினைமுற்றுமாதலின் அரும்பியது கண்ட கானவர் தினைகொய்ய ஈண்டுவர்; அதுபற்றிச் சோதிடம் வல்லார் போறலின் வேங்கை கணியெனப்பட்டது.

     உள்ளுறை :-மந்தி பழத்தின் சுளையைத் தின்று அதன் வித்தினைக் கீழ் உகுப்பக் கொடிச்சி வரைபாடி நெற்குறுவாள் என்றது, தலைமகன் தலைமகளது நலனைக் களவினுண்டு அதனாலாய பழிச்சொல்லைப் பரவவிட அன்னை வேலனை யழைத்து வெறியெடுத்து முருகனைப் பாடியாட்டைச் சிதைக்குமே என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

     (பெரு - ரை.) கணித் தொழில் வாய்த்துள்ள வேங்கை எனினுமாம்.

(373)
  
     திணை : முல்லை.

     துறை : இது, வினைமுற்றி மீள்வான் இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீளுந் தலைமகன், தான் காதலியைக் கண்டு மகிழ்வதனை நினைந்து விரைய வருகின்றான் நெறியில் வந்து கண்ட அயலாரொடு, 'அயலீர், எம் காதலி எமக்கு விருந்தயரும் விருப்பினளாய் உணவு அமைக்கும் நிலைமையை இதன் முன்னம் முழுமையும் பெற்றுடையேமோ? இல்லையே! இப்பொழுது பெறலாகியதே! இஃது என்ன வியப்பு," என மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "அருந்தொழின் முடித்த செம்மற்காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்  
    
ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் 
    
களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப 
    
உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலீர் 
10
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை