இதன்முன் அட்டிற்சாலை புகுந்தறியாதாள் எம்பாலுள்ள அன்பால் இன்று புகுந்து வருந்தா நிற்குமென்று மகிழ்கின்றான் 'முற்றையுமுடையமோ'வென்றான். தனக்கு அன்பு மீதூர்ந்து வாய் சோர்ந்து சொல்லி விரைந்து தோன்றலின் யாதொரு தொடர்பு மில்லாத நெறிவரும் அயலாரை விளித்துக் கூறினான்.
மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.
(374)