பக்கம் எண் :


643


இகு கரை வேர் கிளர் மாஅத்து அம் தளிர் போல - அவ்வண்ணம் அன்பில்லாதேனை அவர் அருளாராயினும் கரையை மோதியோடுகின்ற கான்யாற்றின் இடிகரையில் வேர்களெல்லாம் அலசப்பட்டுத் தோன்றிக் காற்றாலலையும் மாமரத்தின் அழகிய தளிர்போல; நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை யாங்கனம் தாங்குவென் - நடுங்குதல் நீங்காத நெஞ்சுடனே இத்துன்பத்தை எவ்வாறு தாங்கவல்லேன்? எ - று.

     (வி - ம்.) பெரும்பிறிது - சாக்காடு. இகுகரை - இடிந்த கரை. இடும்பை - காமநோயுமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) 'இலேனு மல்லேன்' என்பதனை எடுத்துக் கூறுமாற்றால் வினாவாக்கிக் கொள்க. அன்பிலேன் அல்லேனோ என்ற படியாம். சாலும் என்பது சான்ம் என்றாயிற்று.

(381)
  
     திணை : நெய்தல்.

     துறை : இஃது, ஒரு வழித்தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாள் ஆகிநின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது.

     (து - ம்,) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் யாதோ வொருகாரியமாக இறைமகளை யகன்று போகியகாலை மாலையம் பொழுது கண்டு அவ்விறைமகள் வருந்துவதறிந்த தோழி தான் அவளை ஆற்றுவிக்காது தனியே வருந்தலும், அதனை யறிந்த தலைவி தான்படுந் துன்பத்தை யடக்கிக்கொண்டு தோழியை நெருங்கித் 'தோழீ! நம்மை யகன்ற காதலரை நினைந்து நாம் வருந்துவதாயினும் அவரும் நாணும் படி அலரெழுமாதலிற் கரத்தல் வேண்டும் என்பதறிந்தே யான் வருந்துகிலே'னென ஆய்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
கானல் மாலைக் கழிநீர் மல்க 
    
நீல்நிற நெய்தல் நிறையிதழ் பொருந்த 
    
ஆனாது அலைக்குங் கடல்மீன் அருந்திப் 
    
புள்ளினம் குடம்பை யுடன்சேர்பு உள்ளார் 
5
துறந்தோர் தேஎத்து இருந்துநனி வருந்தி 
    
ஆருயிர் அழிவது ஆயினும் நேரிழை 
    
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்புநீர்த் 
    
தண்ணந் துறைவன் நாண 
    
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.