பக்கம் எண் :


650


துய்த்து உலகமிகழும் இகழ்ச்சிக்கு அஞ்சாது நின் முன்றிலிற்காத்து வைகினானென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஊடலைத் தணித்தல்.

     (பெரு - ரை.) பணிந்து என்னுஞ் சொல் உரையி்ல் வாளாவிடப் பட்டது. அதனை நமது ஏவற்குப் பணிந்து வதுவை என்று அவர் வந்த ஞான்றென இயைத்துக்கொள்க.

(386)
  
     திணை : பாலை.

     துறை : இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறீஇயது.

     (து - ம்,) என்பது, தலைமகன் பிரிதலானே மெலிவடைந்த தமைகளைத் தோழி நெருங்கிச் 'சுரத்தின்கண்ணே சென்ற காதலர் குறித்த கார்ப்பருவம் வந்திறுத்த தாதலின் அவர் இன்னே விரைந்து வருவர் காண்; அங்ஙனம் வருவதன்முன் நினது நலன் சிதைந்தழியுமாறு வருந்தாதே கொள்' என்று கூறிப் பருவங்காட்டி வலியுறுத்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைப்பட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.

    
நெறியிருங் கதுப்பும் நீண்ட தோளும் 
    
அம்ம நாளும் தொன்னலஞ் சிதையேல் 
    
ஓராச் செந்தொடை ஒரீஇய கண்ணிக் 
    
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய 
5
துன்னரும் கவலை அருஞ்சுரம் இறந்தோர் 
    
வருவர் வாழி தோழி செருவிறந்து 
    
ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த  
    
வேல்கெழு தானைச் செழியன் பாசறை 
    
உறைகழி வாளின் மின்னி உதுக்காண் 
10
நெடும்பெருங் குன்றம் முற்றிக் 
    
கடும்பெயல் பொழியுங் கலிகெழு வானே.  

     (சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழி! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக; அஞ்சுவர செரு விறந்து ஆலங்கானத்து இறுத்த வேல் கெழு தானைச் செழியன் பாசறை - யாவரும் அஞ்சும்படி போர் வென்று தலையாலங்கானத்துச் சென்று தங்கிய வேற்படை பொருந்திய சேனைகளையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பாசறையிலேயிருந்து ; உறை கழி வாளின் மின்னி - உறையினின்று நீக்கிய வாள் போல