(து - ம்,) என்பது, தலைமகன் பிரிதலானே மெலிவடைந்த தமைகளைத் தோழி நெருங்கிச் 'சுரத்தின்கண்ணே சென்ற காதலர் குறித்த கார்ப்பருவம் வந்திறுத்த தாதலின் அவர் இன்னே விரைந்து வருவர் காண்; அங்ஙனம் வருவதன்முன் நினது நலன் சிதைந்தழியுமாறு வருந்தாதே கொள்' என்று கூறிப் பருவங்காட்டி வலியுறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைப்பட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.
| நெறியிருங் கதுப்பும் நீண்ட தோளும் |
| அம்ம நாளும் தொன்னலஞ் சிதையேல் |
| ஓராச் செந்தொடை ஒரீஇய கண்ணிக் |
| கல்லா மழவர் வில்லிடை விலங்கிய |
5 | துன்னரும் கவலை அருஞ்சுரம் இறந்தோர் |
| வருவர் வாழி தோழி செருவிறந்து |
| ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த |
| வேல்கெழு தானைச் செழியன் பாசறை |
| உறைகழி வாளின் மின்னி உதுக்காண் |
10 | நெடும்பெருங் குன்றம் முற்றிக் |
| கடும்பெயல் பொழியுங் கலிகெழு வானே. |
(சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழி! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக; அஞ்சுவர செரு விறந்து ஆலங்கானத்து இறுத்த வேல் கெழு தானைச் செழியன் பாசறை - யாவரும் அஞ்சும்படி போர் வென்று தலையாலங்கானத்துச் சென்று தங்கிய வேற்படை பொருந்திய சேனைகளையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பாசறையிலேயிருந்து ; உறை கழி வாளின் மின்னி - உறையினின்று நீக்கிய வாள் போல