பக்கம் எண் :


651


மின்னி; உதுக்காண் - உவ்விடத்தே பாராய்; நெடும் பெருங்குன்றம் முற்றிக் கலி கெழு வான் - நெடிய பெரிய மலையைச் சூழ்ந்து முழக்கம் மிக்க மேகம்; கடும் பெயல் பொழியும் - விரைந்து மழையைப் பெய்யாநின்றது; ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர் ஓராஅச் செந்தொடை வில் இடை துன் அரும் விலங்கிய கவலை - இப் பருவத்தினை நோக்கியவுடன் வெறுத்தொழிந்த மாலையையுடைய தந்தொழிலன்றிப் பிற கல்லாத வீரர் பயிலாது ஏந்திய செவ்விய அம்பினை வில்லினின்றும் விடுதலானே அஞ்சி யாரும் நெருங்குதற்கரிய குறுக்கிட்ட கவர்த்த வழியையுடைய; அரும் சுரம் இறந்தோர் - சென்று சேர்தற்கியலாத சுரத்தின்கண்ணே முன்பு சென்ற காதலர்; (விரைவில்) வருவர் - விரைவில் வாராநிற்பர்; நெறி இருங் கதுப்பும் நீண்ட தோளும் நாளும் தொல் நலம் சிதையேல் - அங்ஙனம் அவர் வருதற்குள்ளாக நீ வருத்தமுற்று நெறித்த கரிய கூந்தலினும் நெடிய தோளினும் நாள்தோறும் பழமையாயுள்ள அழகெல்லாவற்றையுங் கெடுத்துக்கொள்ளாதொழிவாய்; எ - று.

     (வி - ம்.) மழவர் - வீரர். உதுக்காணென்றது பருவங்காட்டியது. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) ஒல்லாச் செந்தொடை என்றும் பாடம்; இதுவே சிறந்த பாடம். அறத்தொடுபடாத செந்தொடை என்றவாறு. செருவிறந்து - போரின்கட் செறிந்து என்க. இறந்து எனப் பிரிப்பாரும் உளர்.

(387)
  
     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, வரைவுநீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, வரைந்தெய்துமாறு கருதிய தலைமகன் பொருளீட்டச் சென்று நீட்டித்தலாலே தலைமகள் வருந்துமெனக் கவன்ற தோழியை, அங்ஙனம் நீட்டித்தான் மீண்டுவந்து ஒருசிறை உறுவானாதலை அறிந்த தலைமகள் நோக்கித் துறைவன் என்னைப் பிரிந்தானென்பதன்றி அவன் என் னுள்ளத்தினின்று நீங்க அறியானாதலின், என் நெற்றியிற் பசலை எவ்வாறுண்டாமெனத் தேற்றித் தான் கூறும் உள்ளுறையைக் கேட்ட தலைமகன் விரைந்து வரையுமாறு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் .............. தானே கூறும் காலமு முளவே" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.

     துறை : (2) மனையுள் வேறுபடாது ஆற்றினாயென்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.