பக்கம் எண் :


660


தாம் செம்மாப்புற்ற உள்ளத்துடனே முன்பு வந்து நின்னை முயங்கி அகன்ற கடற்கரைச் சோலையிடத்துள்ள குறியை இப்பொழுது வந்து கண்டு நின்று அழிகின்றனர் போலும்; எ - று.

     (வி - ம்.) சிறுவர் சுவைப்பதற்குரிய கொங்கைபோறலின் நுங்காகிய முலை யென்றார். தில்ல: இடைச்சொல்லீறு திரிந்தது. பால் நாள் - இரவு பாதியாகப் பகுத்த நடுயாமம்.

     பால்நாள் முனிபடர் என்றதனால் இரவு நடுயாமத்து வருந்துகின்றனையாதலின் இரவுக்குறிக்கு உடன்படுவாயாக என்று குறிப்பித்தாள். களைப என்றதனால், நீ உடன்படின் இரவினஞ்சாது போந்து முயங்கி நின் துயரை நீப்பரென்று குறிப்பித்தாள். நன்மனை அறியின், நன்றென்றதனால் உடன்படின் யானே சென்று அழைத்துவந்து நமது மாளிகையை அறியச் செய்வேனென்றாள்.

     இறைச்சி:- தந்தையொடு செல்ல முயன்றும் செல்லாதொழிந்த சிறார் பனை நுங்கைப் பெற்று மகிழுமென்றது, தலைவனை மணந்து அவனுடன் சென்று இல்லறம் நிகழ்த்தற்பாலமாகிய யாம் அங்ஙனம் நிகழ்த்தற்கியலாமையின் அவனுடன் கூடுமின்பத்தை நமது இல்லகத்தேயே பெறற்பாலம் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி ஏற்குமாறு தலைவியின் குறிப்பறிதல்.

     (பெரு - ரை.) மன் தில்ல என்னும் இடைச் சொற்கள் மற்றில்ல எனப் புணர்ந்தன என்க. நன்மனை அறியின் நன்று அவர் பானாள் படர்களையினுங் களைப என்றதனால் இரவுக்குறியிடம் கூறி வரவேற்றமையுணர்க, 'துணையதின்' என்றும் பாடம்.

(392)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரைவு மலிந்தது.

     (து - ம்,) என்பது, தலைமகன் வரைவொடு வருதலை யறிந்த தோழி, தலைவியை நெருங்கி மகிழ்ந்து கூறுகின்றாள், 'நம் காதலர் நாம் உய்யுமாறு புதியராகி வரும் வருகையும் நாணம் மீதூர்தலான் நாம் ஒருங்குவதும் காண்பாராயின், அவர் வரைய வந்ததற் கேற்ப நமர் உடன்படுவரோ?" 'உடன்படின் காதலரோடு மகிழ்ந்து பேசுவரோ?' என ஆய்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின் 
    
கடுஞ்சூல் வயப்பிடி கன்றீன்று உயங்கப் 
    
பாலார் பசும்புனிறு தீரிய களிசிறந்து 
    
வாலா வேழம் வணர்குரல் கவர்தலின் 
5
கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி