(து - ம்,) என்பது, ''வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினும்'' (தொல். பொ. 114) என்ற விதிப்படி தலைவி கொடுஞ்சொற் கூறி வரைவுகடாவ வேண்டிய வழி அதனையறிந்த தோழி தலைமகனை நெருங்கி ''அன்பனே, நீ அயலானா யிராநின்றனை; எமக்கு யாராந் தன்மையை; நின்னால் யான் நலனிழந்தேம்; அதனைத் தந்து அப்பாற் செல்லுவாயாக'' என்று உள்ளுறையால் வேற்றுவரைவு நேர்ந்ததுங்கூறி வரைவுகடாவா நிற்பது.
(இ - ம்.) (துறைவிளக்கத்திற் கூறப்பட்டது.)
| யாரை எலுவ யாரே நீயெமக்கு |
| யாரையும் அல்லை நொதும லாளனை |
| அனைத்தாற் கொண்கஎம் இடையே நினைப்பின் |
| கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன் |
5 | வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன |
| ஓங்ககல் புணரி பாய்ந்தாடு மகளிர் |
| அணிந்திடு பல்பூ மரீஇ ஆர்ந்த |
| ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக் |
| கடல்கெழு மாந்தை அன்னஎம் |
10 | வேட்டனை அல்லையால் நலந்தந்து செல்மே. |
(சொ - ள்.) எலுவ யாரை நீ எமக்கு யார் - நண்பனே! யாரை நட்பாகவுடையை? நீ எமக்கு யாராந் தன்மையுடையை?; யாரையும் அல்லை நொதுமலாளனை - ஆராயின் நட்புடையாரையும் போல்வாயல்லை! அயலானாயினை!; எம் இடையே நினைப்பின் அனைத்தால் - எம்மிடத்தில் நீ நடந்து கொள்ளும் இயலை ஆராயப் புகின் அஃது அத் தன்மையதேயாகும்; கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் - கடிய பகடாகிய யானையையும் நெடிய தேரையுமுடைய குட்டுவன்; வேந்து அடு களத்தின் முரசு அதிர்ந்து அன்ன - பகைவேந்தரைக் கொன்ற போர்க்களத்தின் கண்ணே அவனது வெற்றிமுரசு அதிர்ந்தாற்போன்ற ஒலியையுடைய; ஓங்ககல் புணரி பாய்ந்து ஆடும் மகளிர் - அலையுயர்ந்து வருகின்ற கடலிலே பாய்ந்து விளையாட்டயர்ந்து நீராடுமகளிர்; அணிந்து இடு பல் பூ மரீஇ ஆர்ந்த ஆ - அணிந்து கழித்தெறிந்த பலவாய மலர்களைப் பொருந்தித் தின்ற முதிர்ந்த பசு; புலம் புகுதரு பேர் இசை மாலை - மீண்டு தான் உறைகின்ற புலத்துட் புகாநின்ற பெரிய இசையையுடைய மாலைப்பொழுதை எதிர்