(து - ம்,) என்பது, வரையாது களவொழுக்கம் நீட்டித்தானைத் தோழி நெருங்கி, 'மலைநாடனே! நின் மார்பால் வருந்திய நோயை யாரிடம் கூறுவேன்? பலகாலும் இனியகூறி அருளாயாய் நீ மயங்கா நின்றனை' என வரைந்து கொள்ளுங் குறிப்புத் தோன்ற வினாவா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, ''களனும் பொழுதும் ............. அனைநிலைவகையான் வரைதல் வேண்டினும்'' (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
துறை : (2) வரைவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல்லியதூஉமாம்.
துறை : (3) இரவுக்குறி மறுத்ததூஉமாம்.
என்பன வெளிப்படை. (உரை மூன்றற்கு மொக்கும்.)
| பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத் |
| தேன்தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப |
| வேங்கை தந்த வெற்புஅணி நன்னாள் |
| பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக் |
5 | கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை |
| பாசறை மீமிசைக் கணங்கொள்பு ஞாயிற்று |