(து - ம்,) என்பது, பிரியின் உயிர்வாழாளென முன்னமே அறிந்து வைத்தும் மணம்புரியாது களவொழுக்கம் மேற்கொண்டு பகற்குறி வந்து மீளுந் தலைமகனைத் தோழி நெருங்கிச் சேர்ப்பனே! நேற்றைப் பொழுதில் யாம் கானலின் கண்ணே விளையாட்டயர்ந்து மீளுங்காலை 'மாலைவந் திறுத்தது; மகளிரும் ஊர்வயி னேகினர்; யாமும் போவோம் வாராய்' என்று யாம் கூற நின் காதலி எதிர்மொழி கொடாளாய் நீ புரிந்ததனை நினைந்து மாறாது அழுது நின்றனள்; இன்னதொரு தன்மையுடையாளை நீயே ஆற்றுவித்துச் செல்வாயென்று வரைவு தோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் கொள்க.
| உருகெழு தெய்வமும் கரந்துறை கின்றே |
| விரிகதிர் ஞாயிறுங் குடக்குவாங் கும்மே |