(து - ம்.) என்பது, தலைவன் வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிந்ததாலே தலைவி வருந்தியது கண்ட தோழி, நீ வருந்துவது புறத்தார்க்குப் புலனாயின் அலராகுமென்று வற்புறுத்துவது கேட்ட தலைவி, நம்மூர் இனிமையுடையதாயினும் நம் தலைவன் பிரிந்தவுடன் வெறுப்பாகத் தோன்றுகின்றதாதலின் யான் எங்ஙனம் வருந்தா தொழிவனென அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "வரைவிடைவைத்த காலத்து வருந்தினும்" (தொல்-கள- 21) என்னும் விதி கொள்க.
| வேட்டம் பொய்யாது வலைவளஞ் சிறப்பப் |
| பாட்டம் பொய்யாது பரதவர் பகர |
| இரும்பனந் தீம்பிழி யுண்போர் மகிழும் |
| ஆர்கலி யாணர்த் தாயினுந் தோடுகெழு |