பக்கம் எண் :


67


    அத்தத்து ஊணின்று வாடுங்காலத்தும் ஆவினைப் பெற்றம் அணையா நிற்குங்கண்டீர்; அங்ஙனம் அணையும்பொழுது எழுகின்ற மணியோசைக்கு நீயிர் வருந்துவீராதலின் இவளையும் உடன்கொண்டு சேறல் நன்றென்றாள். இடிமுழக்கத்துக்கு அஞ்சுழி அணைத்துக் கொளற்கின்மையான் இறந்துபடுமாதலின் இவள்வலம் என்னாலே தாங்கப்படுவதன்றென்றாள். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல். "ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் . . . . தோழி மேன" (தொ-பொ- 414) என்றதனால் வரைவிடைவைத்துப் பிரிகின்றான் ஆற்றிக்கொண் டிருவென்று கூறத் தோழி மறுத்துக் கூறினாளாயிற்றென்பது நச்சினார்க்கினியம்.

    (பெரு - ரை.) பரம் - பாரம். என்பரம் அன்று - யான் சுமக்கும் அளவுடைய பாரமன்று. பெரிதாம் என்றவாறு. எனவே இவள் இறந்துபடுவள் என்றாளாயிற்று. இவள்கண் துன்பக் கண்ணீராலே மறைக்கப்படும் என்பதுணர்த்துவாள் குவளை மாமலர் என்னாது குவளை நீர் சூழ் மாமலர் என்றாள், என்னை ?

  
"உவமப் பொருளின் உற்ற துணரும் 
  
 தெளிமருங் குளவே திறத்திய லான"     (தொல்-உவம- 20)  

என்பதோத்தாகலான் என்க. எனவே குவளையின் நீர் நிரம்பிய கரிய மலர் போன்ற கண் எனக் கண்ணுக்கு அடையாக்காமல் இவள்கண் நீர்சூழ் குவளை மலர் போன்று அழ என வினையுவமமாக்குக. இனி நீயிர் பிரியின் இவ்வூரும் பொலிவிழக்கும் 'ஆயத்தேமும் பெரிதும் வருந்துவேம்' இவளும் தேய்வள் என்பது இறைச்சியிற் றோன்ற, பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் மணி பைய இசைக்கும் என்றாள் என்க.

(37)
  
    திணை: நெய்தல்.

    துறை : இது, தலைவி வன்புறையெதிரழிந்து சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவன் வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிந்ததாலே தலைவி வருந்தியது கண்ட தோழி, நீ வருந்துவது புறத்தார்க்குப் புலனாயின் அலராகுமென்று வற்புறுத்துவது கேட்ட தலைவி, நம்மூர் இனிமையுடையதாயினும் நம் தலைவன் பிரிந்தவுடன் வெறுப்பாகத் தோன்றுகின்றதாதலின் யான் எங்ஙனம் வருந்தா தொழிவனென அழுங்கிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "வரைவிடைவைத்த காலத்து வருந்தினும்" (தொல்-கள- 21) என்னும் விதி கொள்க.

    
வேட்டம் பொய்யாது வலைவளஞ் சிறப்பப் 
    
பாட்டம் பொய்யாது பரதவர் பகர 
    
இரும்பனந் தீம்பிழி யுண்போர் மகிழும்  
    
ஆர்கலி யாணர்த் தாயினுந் தோடுகெழு