| 1 பைய விசைக்கும் அத்தம் வையெயிற்று |
| இவளொடுஞ் செலினோ நன்றே குவளை |
5 | நீர்சூழ் மாமல ரன்ன கண்ணழக் |
| கலையொழி பிணையிற் கலங்கி மாறி |
| அன்பிலிர் அகறி ராயி னென்பரம் |
| ஆகுவ தன்றிவள் அவலம் நாகத்து |
| அணங்குடை யருந்தலை உடலி வலனேர்பு |
10 | ஆர்கலி நல்லேறு திரிதருங் |
| 2கார்செய் மாலை வரூஉம் போழ்தே. |
(சொ - ள்.) பிணங்கு அரில் பழவிறல் வாடிய நனந்தலை - ஒன்றோடொன்று சிக்குண்ட சிறுதூறுகளும் பழைமையான நல்ல தோற்றமும் வாடிய அகன்ற இடத்தையுடைய; ஊண் உணங்கு ஆயத்து ஓர் ஆன் தெள் மணி பைய இசைக்கும் அத்தம் - உணவின்றி வாட்டமுற்ற நிரையிலுள்ள ஓராவினது தெளிந்த மணியோசை மெல்லென வந்து ஒலியாநிற்கும் அத்தத்தில்; வை எயிற்று இவளொடும் செலின் நன்று - நீயிர் பொருள் நசையாற் செல்லுகின்ற இப்பொழுது கூரிய பற்களையுடைய இவளோடுஞ் செல்வீராயின் அது மிக நல்லதொரு காரியமாகும்; கலை ஒழி பிணையின் கலங்கிக் குவளை நீர் மாமலர் அன்ன கண் அழ - அங்ஙனமின்றிக் கலைமானைப் பிரிந்த பெண் மான் போல இவள் கலக்க முற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலர்போன்ற கண்களில் அழுகின்ற நீர்வடிய; மாறி அன்பு இலிர் அகறீர் ஆயின் - மாறுபட்டு அன்பில்லாதீராய் நீயிர் இவளைப் பிரிந்து செல்லுவீராயின்; நாகத்து அணங்கு உடை அருந்தலை உடலி - பாம்பினது வருத்துகின்ற அரிய தலை துணிந்து விழும்படி சினந்து; வலன் ஏர்பு ஆர்கலி நல் ஏறு திரிதரும் கார்செய் காலம் வரூஉம்பொழுது - வலமாக எழுந்து மிக்க முழக்கத்தையுடைய நல்ல இடியேறு குமுறித் திரியாநின்ற முகில் சூழ்ந்துலாவுங் கார்ப்பருவத்து மாலைக் காலம் வரும்பொழுது இவள் அவலம் என்பரம் ஆகுவது அன்று - இவள் படுகின்ற அவலம் என்னாலே தாங்கப்படுவ தொன்றன்று காண்மின்; எ - று.
(வி - ம்.)பழவிறல் - பழைய தன்மை. திரிதரல் - மேகத்தில் யாண்டுமோடி முழங்குதல். நனந்தலை யத்தமென இயைக்க. வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல் ஒரு பருவகாலத்தளவேயாமாதலிற் கார்ப்பருவத்தாற்றாளெனவே ஆனித்திங்கள் முதலிற் செல்வானென்பது பெறப்பட்டது.