(து - ம்.) என்பது வரைவிடைவைத்துப் பிரியுந் தலைமகன் யான் வருமளவும் தலைவியை ஆற்றியிருவென்றாற்கு நீ இவளையும் உடன் கொண்டு செல்வாயாக, அன்றிப் பிரிந்துசென்றால் கார்காலத்து மாலைப்பொழுதில் இவள் படுந் துன்பம் என்னா லாற்றுவிக்குந் தரத்ததன் றெனத், தோழி மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு அவன் "விலங்குறினும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.
| பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை |
| உணங்கூ ணாயத் தோரான் தெண்மணி |