பக்கம் எண் :


90


     (து - ம்.) என்பது, அறத்தொடு நிற்றலின் கண்ணதாகிய வெறியெடுக்கும் பொழுது சிறைப்புறமாகத் தலைமகன் வந்திருப்பதையறிந்த தலைவி, அவன் கேட்குமாற்றானே தோழியை நோக்கி மழை இடியொடு பெய்யா நின்றதெனத் தான் நெறியினது ஏதமஞ்சியதும், படிமத்தான் வந்ததனாலே முச்சி அளித்தலமையாதென வெறியயர்வதுஞ் சொல்லி இங்ஙனம் வெறியெடுத்தலானே, "நம் தலைவன் திறத்து நாம் செயற்பாலது யாதென" அழுங்கிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) "வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்" என்னும் விதிகொள்க.

    
யாங்குச்செய் வாங்கொல் தோழி யோங்குகழைக் 
    
காம்புடை விடரகஞ் சிலம்பப் பாம்புடன்று 
    
ஓங்குவரை மிளிர வாட்டி வீங்கு செலல் 
    
கடுங்குரல் ஏறொடு கனைதுளி தலைஇப் 
5
பெயலா னாதே வானம் பெயலொடு 
    
மின்னுநிமிர்ந் தன்ன வேலன் வந்தெனப் 
    
பின்னுவிடு முச்சி அளிப்பா னாதே 
    
பெருந்தண் குளவி குழைத்த பாவடி 
    
இருஞ்சே றாடிய நுதல கொல்களிறு 
10
பேதை ஆசினி ஒசித்த 
    
1 வீதா வேங்கைய மலைகிழ வோற்கே. 

     (சொ - ள்.) தோழி வானம் ஓங்கு கழைக் காம்பு உடை விடர் அகம் சிலம்ப - தோழீ ! மேகமானது உயர்ந்த அடித்தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி யெடுப்ப; பாம்பு உடன்று ஓங்குவரை மிளிர வாட்டி வீங்க செலல் கடுங்குரல் ஏறொடு கனை துளி தலைஇப் பெயல் ஆனாது - பாம்புகள் வருத்தமுற்று உயர்ந்த துறுகல்மீது புரளுமாறு துன்புறுத்தி விரைந்த செலவையுடைய கடிய முழக்கமிக்க இடியேற்றுடனே மிக்க துளியைப் பெய்யத் தொடங்கி அப் பெயலை நிறுத்துகின்றிலது. பெயலொடு மின்னு நிமிர்ந்து அன்னவேலன் வந்தென - அத்தகைய பெயலைக் கண்டு ஆற்றது ஏதம் அஞ்சி வேறுபட்ட என்னை உற்றதறியாது நற்றிறம் படர்ந்த அன்னை வெறியெடுத்தலும் அதற்காக மின்னலைச் செய்தமைத்தாற் போன்ற வேலைக் கையிலுடைய படிமத்தான் வந்தானாதலின்; பின்னுவிடு முச்சி அளிப்பு ஆனாது - இனிப் பின்னி விடுத்தற்குரிய கொண்டையிற் பூவைக் குலையாது காத்தலும் அரியதாயிரா நின்றது; பெருந் தண் குளவி குழைத்த பா அடி இருஞ் சேறு ஆடிய நுதல கொல் களிறு - ஆதலாற் பெரிய குளிர்ச்சியையுடைய

  
 (பாடம்) 1. 
வீத்தர்.