(து - ம்.) என்பது, பொருள்வயிற்பிரியுந் தலைமகன் பிரிதற்கு உள்ளம் எழானாகி நெஞ்சைநோக்கி நெஞ்சமே ! யாம் இவளது முயக்கத்தைக் கைவிடக் கருதுகில்லேம்; நீ தானும் முயற்சியை மேற்கொண்டு பிரிந்துபோதலைக் கருதியமைகின்றிலை; இவளது முயக்கத்தினும் பொருள் மென்மையதாதலின் நீயே போவாயெனக் கூறிச் செலவழுங்கா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத் தானும்" (தொல்-கற்- 5) என்னும் விதி கொள்க.