பக்கம் எண் :


96


     (வி - ம்.) புலம்பு - வருத்தம். வாப்பறை - தாவிப் பறத்தல்; வரவும் என்னும் செய்யுமென்னெச்சத் தீற்றுயிர் மெய்கெட்டு வலிக்கும் வழி வலித்தல் பெற்றது. ஆர் : அசை. மதி இரண்டும் முன்னிலையசை. கண்டல் - நெய்த னிலத்திலுள்ளதொரு மரம். எனவ, அ: விரித்தல் விகாரம்; எழுத்துப்பேறுமாம்: பின்னுள்ளோர் பன்மையுணர்த்தும் விகுதியென்ப. இது, தூதுமுனிவின்மை.

     சிறிது பொழுதகத்துள்ளே தோன்றி மறையினும் அதனிடை ஆடவரில் வழி மகளிரை வருத்துந்தன்மை நோக்கிச் சிறுபுன்மாலையென்றாள். ஒன்று மறப்பினும் ஒன்று நினைப்பூட்டுமாதலிற் கிளையோடிருந்து கேட்டியென்றாள். ஞாழலந்தழை திரைப்புறந் தைவரு நாடனென்றது, அவன் என்னை முயங்கி முதுகைத் தைவர யான் புலம்பொழிவனென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) வளைநீர் - கடல்; அன்மொழித்தொகை, கருங்கால் வெண்குருகு என்புழியும், பெரும்புலம்பின்றே சிறுபுன்மாலை என்புழியும் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. நொதுமல் நெஞ்சம் - அன்புத் தொடர்பற்ற வறுநெஞ்சம். கூறுதற்குரிய உரிமையுடைமையை எடுத்துக்காட்டுவாள் எந்துறைவற்கென்னாது நுந்துறைவற்கு என்றாள். நுந்துறைவன் என்றது அவன் தன்பால் ஏதிலன் போல் ஒழுகுகின்றான் என்பதும் தோற்றி நின்றது.

(54)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரைவிடை மெலிவாற்றுவிக்குந் தோழி தலைவற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, வரைபொருட் பிரிந்துவந்த தலைவனைத் தோழி நீ முன்னர் இரவின் வந்து முயங்கியதனாலாய குறிப்புக்களைக் கண்ட அன்னை வினவலும் இவள் விடைகூற அறியாளாய் என்னை நோக்கினளாக, யான் சந்தனவிறகின் கொள்ளியைக் காட்டி இதனாலுண்டாயினவென் றுய்வித்தே னெனத் தானாற்றுவித்திருந்த அருமை தோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவுடம் பட்டோற் கடாவல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க,

    
ஓங்குமலை நாட ஒழிகநின் வாய்மை 
    
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி 
    
உறுபகை பேணாது இரவின் வந்திவள் 
    
பொறிகிளர் ஆகம் புல்லத் தோள்சேர்பு 
5
அறுகாற் பறவை அளவில மொய்த்தலிற் 
    
கண்கோ ளாக நோக்கிப் பண்டும் 
    
இனையை யோவென வினவினள் யாயே 
    
அதனெதிர் சொல்லா ளாகி அல்லாந்து