(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்தவன் தலைவியின் ஊடலைத் தணிக்கப் பெறானாய் விருந்தொடு புகுதக்கண்டு அவள் தன் ஊடலையடக்கி விருந்தெதிர் கொண்டாளாக, அதனை நோக்கிய அத்தலைமகன் இவள் பரிகலந்திருத்தி அட்டிலிடத்தாளாயினள்; இதற்குக் காரணம் இவ்விருந்தே யாதலின் இஃதெஞ்ஞான்றும் வந்துதவுவதாக, வந்தால் இவளின் முயக்கத்தைப் பெறுதற்குரிய இனிய முகத்தைப் பார்ப்போமென்று மகிழ்ந்து கூறாநிற்பது.