பக்கம் எண் :


29


மறந்தனை; இங்ஙனம் நன்றிமறந்த நின்னை அணுகியதன் பயன் உடனிருந்த நாண் ஒழியலாயதன்றி ஊரும் பழி கூறலாகியதென்றாள்.

     உள்ளுறை :- :- கடல்கொழித்து ஒதுக்கிய எக்கர் மணலிற் சிலவற்றைக் காற்று அள்ளித் தூற்றுதல்போல நின்னால் நீக்கப்பட்ட எம்மை ஊரார் அலர் தூற்றா நிற்பர் - அங்ஙனமே அலர்க என்றதாம். இவ்வுள்ளுறையில் நுடக்கம்போல என்ற ஏனையுவமம் 'கொழித்த எக்கர், ஊதை தூற்றும்' என்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது. அலரொழித்தல் வரைந்தன்றி யின்மையின் இது வரைவுகடாதலாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) நீ புணர்ந்தனையேம் அன்மையின் என்றும் பாடம். இதற்கு நின்னாற் புணரப்பட்டேம் போல்கின்றிலேம் என்க. நின்னாற் புணரப்பட்டேம் ஆயின் இன்புற்றிருப்பேம் அல்லமோ அங்ஙனம் இன்புறாமற்றுன்புறுகின்றோமாகலின் நீ புணர்ந்தனையேம் அன்மையின் என்றவாறு பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு என்றும் பாடம். இப் பாடமே சிறப்புடையது. நெஞ்சந்தாங்கத் தாங்கி என்பதற்கு, நெஞ்சந் தாங்குமளவிற்குத் தாங்கி என்பது பொருந்தும்.

(15)
  
     திணை : பாலை.

     துறை : இது, பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது.

    (து - ம்.) என்பது, தலைவியை விட்டுப் பிரிந்து சென்று பொருளீட்டும்படி கருதி முயன்ற தன்னெஞ்சினைத் தலைவன் நோக்கி யான் இவளின் கண்ணாற் கட்டுண்டேன்; இவ்வின்பத்தினுங் காட்டிற் பொருள்சிறவா; அப்பொருள் எங்ஙனமாயினுமாக; இவ்விரண்டினையுமாராய்ந்து சிறந்தது ஒன்றனை நீ யெய்துதற்குரியை எனக்கூறி இல்லத் தழுங்கா நிற்பது. கடைக்கூட்டல் - ஒருப்படுத்தல்.

    (இ - ம்.) இதற்குக் "கரணத்தினமைந்து முடிந்த காலை" (தொல்-கற்- 5) என்னும் நூற்பாவின்கண் 'வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்' என்னும் விதி கொள்க.

    
புணரின் புணராது பொருளே பொருள்வயிற்  
    
பிரியின் புணராது புணர்வே யாயிடைச்  
    
சேர்பினுஞ் செல்லா யாயினு நல்லதற்  
    
குரியை வாழியென் நெஞ்சே பொருளே 
5
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்  
    
ஓடுமீன் வழியிற் கெடுவ யானே 
    
விழுநீர் வியலகந் தூணி யாக 
    
எழுமா ணளக்கும் விழுநெதி பெறினுங்