(து - ம்.) என்பது, சென்று வினைமுடித்துவந்த தலைமகன் பரத்தையொடு முயங்கியதறிந்து நொந்துபுலந்த தலைவியைத் தோழி நெருங்கி 'நீ தலைவனோடிருந்தும் வருந்துவதென்னென்றாட்கு அவள் அறியாதார்க்கு அங்ஙனமே தோன்றுமாயினும் அவன் பரத்தைமார்பின்கண்ணே தன்னை மடுப்பானாயினான்; என்னை அன்பின்றி முயங்குவானாதலின், அவன் முயக்கந்தான் யாது பயனுடையதாகு'மென்று வருந்திக்கூறாநிற்பது.