பக்கம் எண் :


13


     இனி, "இளையர்த் தரூஉம் வாடையொடு" என்பதும் பாடம். இப்பாடமே சிறந்ததாம். இதற்கு இன்று "வினைவயிற் செலுத்தப்பட்ட ஏவலிளையரையும் செல்லாமற் றடுத்து மீட்டுத் தருகின்ற வாடைக் காற்று" எனப்பொருள் கூறுக. (5)

  
6. பரணர்
     திணை : குறிஞ்சி.

     துறை : இஃது, இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன் தோழி கேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, இரவுக்குறி வேண்டிச் சென்ற தலைவன், தோழிகேட்டு உடன்படுத்துமாறு யாம் வந்திருக்கின்றே மென்று தலைவியிடத்து ஒருவர் சென்று கூறினால் யாரோ வென்னாளாய் யாம் வந்துளே மென்று மகிழ்ந்து களிப்பால் மயங்குவள்; அங்ஙனங் கூறுவாரைப் பெற்றிலேமே யென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.)இதற்கு, "பண்பிற் பெயர்ப்பினும்" (தொல்-கள- 12) என்னும் நூற்பாவின்கண் வரும் "பரிவுற்று மெலியினும்" என்னும் விதி கொள்க.

    
நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் 
    
நாருரித் தன்ன மதனின் மாமைக்  
    
குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண் 
    
திதலை யல்குற் பெருந்தோட் குறுமகட் 
5
கெய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, 
    
இவர்யார் என்குவள் அல்லள் முணாஅ 
    
தத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி  
    
எறிமட மாற்கு வல்சி யாகும் 
    
வல்வில் லோரி கானம் நாறி  
10
இரும்பல் ஒலிவருங் கூந்தல் 
    
பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே. 

     (சொ - ள்.) நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால் நார் உரித்து அன்ன - நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளிற் புழையுடைய திரண்ட தண்டை நாருரித்தாற் போன்ற; மதன் இல்மாமை - அழகு குறைந்த மாமையையும்; குவளை அன்ன ஏந்து எழில் மழைக்கண் - குவளை போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியுடைய கண்ணையும்; திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு - திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவியிடத்து; எய்தச் சென்று செப்புநர்ப் பெறின் - நெருங்கச் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின்; இவர் யார் என்குவள்