பக்கம் எண் :


218


(அகநா. 220:17, 376:16); “பூட்டுசிலை யிறவு” (சீவக. 1788); “முடங்கிறா முதுநீர்” (தே. திருநா. திருவாரூர்.)

     2. இகுதிரை: மலைபடு. 226;ஐங்.465:1; அகநா. 82:5, 112:14, 274:2.

     4. நுதற்கவின்: கலித்.53:24.

(109)
  
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வாரானாக, “இனி அவர் வரினும் வாராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து படுவேன்” என்று தலைவி கூறியது.)
 110.   
வாரா ராயினும் வரினு மவர்நமக் 
    
கியாரா கியரோ தோழி நீர 
    
நீலப் பைம்போ துளரிப் புதல 
    
பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி 
5
நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த 
    
வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் 
    
றின்னா தெறிதரும் வாடையொ 
    
டென்னா யினள்கொ லென்னா தோரே. 

என்பது (1) பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

     (2) தலைமகனைக் கொடுமைகூறித் தலைமகளைத் தோழி வற்புறீ இயதுமாம் (பி-ம். வற்புறுத்தியது.)

கிளிமங்கலங்கிழார் (பி-ம். கிள்ளிமங்கலங்கிழார்.)

     (பி-ம்.) 2-3. ‘நீர் நிலைப’்; 3-4. ‘புதன்மலியொண்’; 7.’றின்னா வெறி தரும்’, ‘றின்னா தெறி வரும’்.

     (ப-ரை.) தோழி---, நீர - நீரிலுள்ள, நீலம் பைம்போது உளரி - நீலத்தினது மலருஞ் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து, புதல - புதலிலே உள்ள, பீலி ஒள் பொறி கருவிளை - மயிற்பீலியின் ஒள்ளிய கண்ணைப் போன்ற கருவிளை மலரை, ஆட்டி - அலைத்து, நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த - நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த, வண்ணம் துய்மலர் - நிறத்தையும் துய்யையும் உடைய மலர்கள், உதிர - உதிரும் படி, தண்ணென்று - குளிர்ச்சியையுடையதாகி, இன்னாது எறிதரும் வாடையொடு - இன்னாததாகி வீசுகின்ற வாடைக் காற்றினால், என் ஆயினள் கொல் - எத்தன்மையினள் ஆனாளோ, என்னாதோர் - என்று நினைந்து கவலையுறாத தலைவர், வாராராயினும் - வாராவிடினும், வரினும் -