கூடலூர் கிழார். (பி-ம்) 1.‘நிறைபோத்’, ‘நிரைபெயர்த்’, ‘நிரைபோத்’; 3.‘மாந்தை’, ‘மாநகை’.
(ப-ரை.) தண் கடல் படு திரை பெயர்த்தலின் - குளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால், வெள் பறை நாரை நிரை - வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை, பெயர்ந்து அயிரை ஆரும் - நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய, ஊர் மரந்தை - ஊராகியமரந்தை, நன்றுமன் - தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது; ஒரு தனி வைகின் -