பரணர். (பி-ம்) 2.‘விழைத்ததன்’; 4.‘பெரும்புயற்றலை’, ‘பெரும்பெயற் றலையவிந் தாங்’, ‘றலையவீஇந் தாங்’. (ப-ரை.) நெஞ்சே, அரு கரை நின்ற - ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பு ஒய் சகடம் - உப்பைச் செலுத்துகின்ற வண்டி, பெருபெயல் தலைய - பெரிய மழை பொழிந்ததனால், வீந்தாங்கு - அழிந்ததுபோல, இவள் இரு பல் கூந்தல் - இவளது கரிய பலவாகிய கூந்தலின், இயல் அணி கண்டு - இயற்கை அழகைக் கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாயாய்க் காமத்தால் நாண் அழிந்து, மகிழ்ந்ததன் தலையும் - கள்ளுண்டு அறிவிழந்து களித்ததன் மேலும், நற உண்டாங்கு - கள்ளை உண்டாற்போல், நீ-, விழைந்த