பக்கம் எண் :


320


    மு. அடிசிற்றொழிலின்கண் மகிழ்ச்சியாகிய தலைவியின் மாண்பை அகம்புகல் மரபின் வாயில்கள் தம்முள் தாம் கூறியது(தொல். கற்பு. 11, இளம், ந.); ‘இது பார்ப்பானையும் பார்ப்பனியையுந் தலைவராகக் கூறியது. கடிமனைச் சென்ற செவிலி கூற்று. வாயில் நேர்வித்தலுமாம்’ (தொல். அகத். 24, ந.); உலகியல் வழக்கே வந்தது (தொல். அகத். 53, ந.; இ.வி. 378); செவிலி நற்றாய்க்குத் தலைமகள் நன்மனைவாழ்க்கைத் தன்மை உணர்த்தியது (நம்பி. 203.)

    (கு-பு.) இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்ககினியர் ‘பார்ப்பானையும் பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது’எனக் கொண்டனர் போலும்; பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர்பெறும் உணவைப்பற்றிக் கூறியிருக்கும் பகுதி (304-10) இங்கே ஆராய்தற்குரியது.

    ஒப்புமைப் பகுதி. முளிதயிர் : அகநா. 394:2; கம்ப. கிட்கிந்தை. 21. காந்தள் மெல்விரல்: பொருந. 33.

    1-2. தயிர் முதலியவற்றை ஆடையில் துடைத்துக்கொள்ளல்: “நெய்யுங் குய்யு மாடி மையொடு, மாசுபட்டன்றே கலிங்கமுந் தோளும்” (நற். 380:1-2.)

    3-4. ‘கிளரிழை யரிவை நெய்துழந் தட்ட, விளரூ னம்புகை யெறிந்த நெற்றிச், சிறுநுண் பல்வியர் பொறித்த, குறுநடை” (நற். 41: 7-10.)

(167)
  
(பொருள் தேடத் துணிந்த நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரியின் உயிர்வாழ்தல் அரிது” என்று தலைவன் கூறியது.)
 168.   
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை 
    
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து 
    
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன 
    
நறுந்தண் ணியளே நன்மா மேனி 
5
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள் 
    
மணத்தலுந் தணத்தலு மிலமே 
    
பிரியின் வாழ்த லதனினு மிலமே. 

என்பது பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.

    (பொருள்வலிக்கும் - பொருள் தேடும் முயற்சியைத் துணியும்.)

சிறைக்குடி யாந்தையார்.

    (பி-ம்) 2.‘பசுங்கொடைப்’; 3.‘பெரும்புலவர்’; 5.‘சாயிறையணைத் தோள்’;6.‘மணத்தொறும்’.

    (ப-ரை.) நெஞ்சே, தலைவி, நல் மா மேனி - நல்ல மாமையையுடைய மேனி, மாரி பித்திகத்து - மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது, நீர் வார் கொழு முகை - நீர் ஒழுகும்