பக்கம் எண் :


322


(தலைவன் தன்பால் பரத்தைமை இல்லையென்று தலைவியினிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, தலைவி, “எம் உயிர் நீங்குவதாக!” என்று கூறியது.)
  169.    
சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற் 
     
றெற்றென விறீஇயரோ வைய மற்றியாம் 
     
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே 
     
பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல  
5
எமக்கும் பெரும்புல வாகி  
     
நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே. 

என்பது (1) கற்புக்காலத்துத் தெளிவிடை விலங்கியது.

     (களவுக் காலத்தும் வரைவு நீட்டித்துத் தலைவன் சூளுற்ற வழி அதற்கு நொந்து தெளிவிடை விலங்கல் (தொல். களவு. 20, ந.) உண்மையின், இங்கே அதனின் வேறுபடுத்தக் கற்புக் காலத் தென்பதமைக்கப்பட்டது. தெளிவு - தலைவன் தான் யாதொரு குற்றமும் செய்யாமையை ஏதுவானும் சூளினானும் தலைவி தெளியச் சொல்லுதல். விலங்கியது - தலைவி மாறு பட்டது. இதனை அகப்பொருட் பெருந்திணைக் குரிய துறை யாக்குவர் அகப்பொருள் விளக்கமுடையார் (நம்பி. 243.)

     (2) இனி, தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூ உமாம்.

வெள்ளி வீதியார்.

    (பி-ம்) 1.‘சுரஞ் செல்லியானைக்’: 2.‘மற்றியான்’; 5.‘எமக்குப்’.

     (ப-ரை.) ஐய-, யாம் நும்மொடு நக்க வால்வெள் எயிறு -யாம் நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள், சுரம் செல்யானை -பாலை நிலத்திற் செல்லும் யானையினது, கல் உறு கோட்டின் - மலையைக் குத்திய கொம்பைப் போல, தெற்றென -விரைவாக, இறீஇயர் - முறிவனவாக; எம் உயிர் - எமது உயிர், பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல -பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல, எமக்கும் பெரு புலவாகி - எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி, நும்மும் பெறேஎம் - உம்மையும் யாம் பெறேமாய், இறீஇயர் - அழிக.

     (முடிபு) ஐய, யாம் நக்க எயிறு இறீஇயர்; எம் உயிர் எமக்கும் புலவாகி நும்மும் பெறேஎம் இறீஇயர்.

     (கருத்து) இனி, நும்மோடு அளவளாவுதலினும் இறத்தல் நன்று.

     (வி-ரை.) தலைவன், “யாம் முன்னொருகால் அன்போடு மகிழ்ந்து பயின்று நகையாடினேமன்றே!” என்று பழமையை நினைவுறுத்தினானாக