பக்கம் எண் :


423


    தலைவியின் கூந்தல் தலைவனுக்கே உரியது: “ஒரூஉநீ யெங்கூந்தல்கொள்ளல்”, “யாரிவ னெங்கூந்தல் கொள்வான்” (கலி.87:1, 89:1); “கூந்தற் கிழவரை” (புறநா. 113:9); “கூந்த றொடேல்” (சீவக. 1229.)

(225)
  
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவன் என்னை மணந்த பின் என் நலன் இழந்தேன்” என்று தலைவி வருந்திக் கூறியது.)
 226.   
பூவொடு புரையுங் கண்ணும் வேயென 
    
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென 
    
மதிமயக் குறூஉ நுதலு நன்றும் 
    
நல்லமன் வாழி தோழி யல்கலும் 
5
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் 
    
குருகென மலரும் பெருந்துறை் 
    
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே,் 

என்பது வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதன்.

     (ப-ரை.) தோழி--, அல்கலும் - இரவுதோறும், தயங்குதிரை பொருத - விளங்கிய அலைகளால் மோதப்பட்ட,தாழை வெண் பூ - தாழையினது வெள்ளிய பூ, குருகு எனமலரும் - நாரையைப் போல மலர்தலைச் செய்வதற்குஇடமாகிய, பெருதுறை விரிநீர் சேர்ப்பனொடு - பெரியதுறைகளை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடையசேர்ப்பனோடு, நகா ஊங்கு - நகுவதற்கு முன்பு, பூவொடுபுரையும் கண்ணும் - தாமரை மலரை ஒத்த கண்களும்,வேய் என விறல் வனப்பு எய்திய தோளும் - மூங்கிலைப்போல வெற்றியை உடைய அழகைப் பெற்ற தோள்களும்,பிறை என மதி மயக்குறூஉம் நுதலும் - பிறை என்றுகருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும், நன்றும்நல்ல - மிகவும் நல்லனவாக இருந்தன; மன் - அந்நிலைஇப்பொழுது கழிந்தது!

     (முடிபு)தோழி, சேர்ப்பனொடு நகாஅவூங்கு, கண்ணும் தோளும்நுதலும் நல்லமன்!

     (கருத்து) தலைவனது பிரிவினால் என் மேனி நலம் அழிந்தது.