பக்கம் எண் :


430


  
“பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க 
  
 நோதக்க நட்டார் செயின்”                    (குறள், 805) 

என்பவாகலின் நான் நட்புரிமையால் இங்ஙனம் செய்தேன் என்றாள்.நோதக - நோவ. தலைவன் நோவச் செய்தலாவது சேட்படுத்தல். ஓ:அசை நிலை. அன்ன: பண்டறி சுட்டு. வரவறியான் - வந்திலன் என்றபடி.

    ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.

    5.வயச்சுறா: குறுந். 269:3.

    சுறா வழங்குநீர்: “எறிசுறாக் கலித்த விலங்குநீர்ப் பரப்பு”(குறுந். 318:1); “சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி யல்கலும், இரவுக்குறிக்கொண்கன் வந்தனன்” (சிற்றட்டகம்.)

(230)
  
(தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “அவர் இங்கேவந்தாலும் என்னோடு அளவளாவாமல் செல்வர். அவருக்கு என்பால் அன்புஇலதாயிற்று” என்று தலைவி கூறி வாயில் மறுத்தது.)
 231.   
ஓரூர் வாழினுஞ் சேரி வாரார் 
    
சேரி வரினு மார முயங்கார் 
    
ஏதி லாளர் சுடலை போலக் 
    
காணாக் கழிப மன்னே நாணட்டு 
5
நல்லறி விழந்த காமம் 
    
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே. 

என்பது வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ.

    (பி-ம்.) 1. ‘ஒராஅவாழினும்’, ‘ஒரூஉவாழினும்’; 4. ‘நாணிட்டு’, ‘நாணட’, ‘நாணிட’.

     (ப-ரை.) தோழி-, ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் -தலைவர் நம்மோடு ஓர் ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும்தெருவில் வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்- இத்தெருவில்வந்தாலும் நன்றாகத் தழுவிக் கொள்ளார்; நாண் அட்டு -நாணத்தை அழித்து, நல் அறிவு இழந்த காமம் - தக்கதிதுதகாததிது என்று எண்ணும் நல்ல அறிவை இழக்கச் செய்யும்காமமானது, வில் உமிழ் கணையின் - வில்லால் எய்யப்பட்டஅம்பைப் போல, சென்று சேண்பட - போய் நெடுந்தூரத்தில்அழியும்படி, ஏதிலாளர் சுடலைபோல - அயலாருடையசுடுகாட்டைப் போல, காணா - நம்மைக் கண்டும்வேறொன்றும் புரியாமல், கழிப - செல்லுவார்.