பக்கம் எண் :


433


    4-5. செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்தது ( நன். 345, மயிலை, 346, சங்.); முதற்பொருளின் வினை தமக்குரிய வினை முதல்வினையானன்றிப் பிறவினை முதல் வினையோடு முடிந்தது (இ.வி. 248);எஞ்சிய என்பதற்கு எஞ்சுவித்தவெனப் பொருள் கொள்ள வேண்டும்( தொல். பாயிரவிருத்தி. ப. 10.)

    ஒப்புமைப் பகுதி 1. உள்ளார்கொல்லோ தோழி: குறுந். 16:1, ஒப்பு.

    1-2. ‘‘உள்ளார் கொல்லோ காதல ருள்ளியும், சிறந்த செய்தியின்மறந்தனர் கொல்லோ” (அகநா. 235:2-3.)

    3. மரல்:குறுந். 100:2.

    மான் மரலை உண்ணுதல்:கலி. 6:1; “மடமா னசாவினந் திரங்குமரல் சுவைக்கும்”, “வரிமரற் கறிக்கு மடப்பிணைத், திரிமருப் பிரலையகாடிறந்தோரே” (அகநா. 49:12, 133:17-18.)

    4.உரற்கால் யானை: “கறையடிக், குன்றுறழ் யானை” (பெரும்பாண். 351-2); “உரல்புரை பாவடி ... ஒருத்தல்” (கலி. 21:1-2); “உரற்காற் குஞ்சரம்” (தஞ்சை. 413.)

    4-5.யானை யாவை உண்ணல்: குறுந். 37:3-4, ஒப்பு; மலைபடு. 429.

(232)
  
(தலைவியை மணந்து கொள்ளாமல் வினைமேல் பிரிந்து சென்றதலைவன் மீண்டு வருகையில் பாகனுக்குத் தலைவியினது ஊரைக்காட்டியது.)
 233.   
கவலை கெண்டிய வகல்வாய்ச் சிறுகுழி 
    
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர் 
    
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன 
    
காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு 
5
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் 
    
வரைகோ ளறியாச் சொன்றி 
    
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே. 

என்பது பட்டபின்றை வரையாது சென்று வினைமுற்றி மீளுந் தலைமகன்,தேர்ப்பாகற்குச் சொல்லியது.

    [பட்ட பின்றை- களவு வெளிப்பட்ட பிறகு; ‘‘பட்ட பின்றைவரையாக் கிழவன், நெட்டிடை கழிந்து பொருள் வயிற் பிரிதலும் ...கற்பா லான” (இறை.25.) ]

பேயன்.

    (பி-ம்.) 1. ‘கல்வாய்ச்’; 4. ‘கானெதிர்’ ... யுணர்ந்தோர்க்கு’; 6. ‘வரைகொள்வறியா’, ‘வரைகொள வறியா’.