பக்கம் எண் :


437


புதிதன்று; அதனை எப்பொழுதும் உடையேன். எல்லாப் பொழுதும்எனக்கு மாலைக் காலம் தரும் துன்பத்தையே தருதலின் எல்லாம் மாலையே” என்று தலைவி கூறினாள்.

    பகல் என்றது விடியல், மாலை, யாமம் ஒழிந்த சிறு பொழுதுகளை.

    ஏகாரங்கள் இரண்டும் அசை நிலைகள்.

    மேற்கோளாட்சி 3. என்மனார்: மன் அசை நிலைப் பொருளில் வந்தது (நன். 431, மயிலை.)

    ஒப்புமைப் பகுதி 3. மு. கலி. 119:16.

    2-3. மாலையில் முல்லை மலர்தல்: குறுந். 108:4-5, ஒப்பு; ஐங். 489:2.

    4. குடுமிக் கோழி: குறுந். 107:1-2.

    5. பெரும்புலர் விடியல்: அகநா. 304:5.

    மு. ஐங். 183.

(234)
  
(வரைந்து கொள்வதற்கு முன் பிரிந்து சென்ற தலைவன், தலைவிபால் மீளும்போது வாடைக்குக் கூறுவானாகி, “வாடையே, அதோதெரிகின்றதே, அது தலைவியின் ஊர்; நீ அவளைப் பாதுகாப்பாயாக”என்று பாகனுக்கு உணர்த்தியது.)
 235.   
ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் 
    
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் 
    
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி 
    
மரையின மாரு முன்றிற் 
    
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. 

என்பது வரையாது பிரிந்து வருவான் வாடைக்கு (பி-ம். வாடைக்கண்) உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.

    (வருவான் - மீண்டு வரும் தலைவன்.)

மாயெண்டன்.

    (பி-ம்.) 1. ‘வாழிய’; 2. ‘தூங்குவெள்’; 3. ‘கல்லுயரண்ணி யதுவே’.

    (ப-ரை.)வாடை - வாடைக் காற்றே, நெல்லி - நெல்லிக்காயை, மரை இனம் ஆரும் முன்றில் - மரையின் திரள்உண்ணுகின்ற முன்னிடத்தை உடைய, புல் வேய் குரம்பை -புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய, நல்லோள்ஊர் - நல்ல தலைவியினது ஊரானது, பாம்பின் தூங்குதோல் கடுக்கும் - பாம்பின் நாலுகின்ற உரியை ஒக்கும்,தூ வெள் அருவி - தூய வெள்ளிய அருவியை உடைய,கல் உயர் நண்ணியது - மலையின் உயரத்திலே பொருந்தியது;