பக்கம் எண் :


438


ஓம்புமதி - அங்கேயுள்ள தலைவியை நீ பாதுகாப்பாயாக;வாழி - நீ வாழ்வாயாக!

     (முடிபு) வாடை, நல்லோள் ஊர் நண்ணியது; ஓம்புமதி; வாழி.

    (கருத்து) மலையின் உச்சியிலே தோன்றுவது தலைவியினதுஊராகும்.

    (வி-ரை.) ஓம்புதலாவது தலைவியைத் துன்புறுத்தாமல் பாதுகாத்தல்.தலைவி வாடைக்கு வருந்துதல் இயல்பு. துன்பம் செய்யும் இயல்பினதாகியவாடைக்குக் கூறுவான், அதனை வயப்படுத்துவான் போல வாழி என்றான்.வாழியோ: ஓகாரம் அசை நிலை. உயர் - உயர்ந்த இடம்; என்றது உச்சியை. நல்லோளென்றான் அவள் நல்லியல்புகளை என்றும் நினைந்த வனாதலின்.

    இதனால் தலைவி வாடைக் காற்றால் வருந்துவாள் என்பதைப்புலப்படுத்தி அவள் ஊர் உள்ள இடமும் உணர்த்திக் குறிப்பினால்பாகனை விரைந்து தேரைச் செலுத்தத் தூண்டினான்.

    மேற்கோளாட்சி மு. தலைவன் நெட்டாறு சேறலின்றி அணிமைக்கட் பிரிந்த வழிக் கூறியது ( தொல். களவு. 17, இளம்.); வரைவிடை வைத்துப் பிரிந்து போகும் தலைமகன் கூறியது (தொல். களவு. 12, இளம். ந.)

    ஒப்புமைப் பகுதி 1-2. அருவிக்குப் பாம்பின் உரி: “செவ்வரைக் கொழிநீர் கடுப்ப வரவின், அவ்வரி யுரிவை யணவரு மருங்கின்” (அகநா. 327:12-3.)

    3-4. நெல்லிக்காயை மரையினம் உண்ணுதல்: (குறுந். 317:1-2); “பராரை நெல்லி யம்புளித் திரள்காய், கான மடமரைக் கண நிரை கவரும்”, “பல்கா னெல்லிப் பைங்கா யருந்தி, மெல்கிடு மடமரை” (அகநா.69:7-8, 399:14-5); “மரைபிரித் துண்ட நெல்லி வேலி” (புறநா. 170:1.)

    5.புல்வேய் குரம்பை: மலைபடு. 439; அகநா. 87:3, 172:10, 200:2, 369:23; புறநா. 120:13.

    மு. குறுந். 233; அகநா. 94, 274, 284.

(235)
  
(வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணியதலைவன், ”இவளை வருந்தாது பாதுகாப்பாயாக” என்று தோழிக்குக்கூற, அவள், “இவளைப் பிரிந்தால் என்றும் பிரிந்தே இருக்க வேண்டும்;அங்ஙனம் செய்வாயேல் நீ உண்ட நலனைத் தந்து செல்வாயாக” என்றுகூறு முகத்தால் அவன் பிரிவைத் தடுத்தது.)
 236.   
விட்டென விடுக்குநாள் வருக வதுநீ 
    
நேர்ந்தனை யாயிற் றந்தனை சென்மோ 
    
குன்றத் தன்ன குவவுமண லடைகரை 
    
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை 
5
வம்ப நாரை சேக்கும் 
    
தண்கடற் சேர்ப்பநீ யுண்டவென னலனே.