பக்கம் எண் :


459


   
" .......... ............ ............ வேங்கை 
   
 வீயா மென்சினை வீயுக யானை 
   
 ஆருயி ரியம்பு நாடன்" 

என்று இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

    ஒப்புமைப் பகுதி 2. திறவோர் - நீதிநூல் உடையோர்; "திறவதிற் றீர்ந்த பொருள்" (திரிகடு. 73.)3. இவ்வென; தொல். கிளவி. 4.

    6-7. நாடன்மார்பு தலைவிக்கு உரியது: குறுந். 68:4. ஒப்பு: நற். 327:7-9.

    நாடன் நட்பு: குறுந். 3:4, 134:7, 304:8, 313:4, 326:3 401:6.

(247)
  
(வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, "வெறியாட்டு அயர்ந்து தாய் தலைவனை அறிந்து, வரைவுக்கு உரியவற்றைச் செய்கின்றாளாதலின் வரைவுண்டாதல் ஒருதலை; அதற்குரிய நாளும் அணிமையில் உள்ளது; ஆதலின் நீ ஆற்றா யாதல் நன்றன்று" என்று தோழி கூறியது.)
 248.   
அதுவர லன்மையோ வரிதே யவன்மார் 
    
புறுக வென்ற நாளே குறுகி  
    
ஈங்கா கின்றே தோழி கானல் 
    
ஆடரை புதையக் கோடை யிட்ட 
5
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனை 
    
குறிய வாகுந் துறைவனைப்  
    
பெரிய கூறி யாயறிந் தனளே. 

என்பது வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது.

உலோச்சன்.

    (பி-ம்.) 1. ‘அதுவர வன்மையோ’; 2. ‘பிறுக’; 5. ‘அடம்பிவர் பமன்ற கொடுயர்’, ‘டூர்நெடும் பெண்ணை’; 7. ‘பெறிய’.

    (ப-ரை.) தோழி--, கானல் ஆடு அரை புதைய - கடற்கரைச் சோலையின் இடத்திலுள்ள அசைந்த அடியிடம் புதையும்படி, கோடை இட்ட - மேல்காற்றுக் கொணர்ந்து இட்ட, அடும்பு இவர் மணல் கோடு ஊர - அடும்பங் கொடி படர்ந்த மணற் குவியல் பரவ, நெடுபனை - நெடிய பனை மரங்கள், குறிய ஆகும் - குறியனவாகும், துறைவனை - கடற்றுறையை உடைய தலைவனை, பெரிய கூறி - முருகன் என்று சொல்லி வெறியெடுத்து, யாய் அறிந்தனள் - நம் தாய் அறிந்து கொண்டாள்; ஆதலின், அதுவரல் அன்மை