பூங்கண்ணன். (பி-ம்.) 3. ‘பூச்சோரணையிற்; 4. ‘கேட்பின்’, ‘கொட்பின்’.
(ப-ரை.)தோழி--, ஒலி கழை நிவந்த - ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த, ஓங்கு மலை சாரல் - உயர்ந்த மலைப் பக்கத்தில், புலி புகா உறுத்த புலவு நாறுகல் அளை - புலி தனக்குரிய உணவைச் செலுத்தி வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகை யினிடத்து, ஆறுசெல் மாக்கள் சேக்கும் - வழிச் செல்லும் மனிதர் தங்கும், கோடு உயர் பிறங்கல் மலை - சிகரங்கள்உயர்ந்த விளக்கத்தை உடைய மலைகளை, இறந்தோர் - கடந்து சென்ற தலைவர், கேளார் ஆகுவர் - நின் துயரைக் கேளார் ஆவர்; கேட்பின் - கேட்டாராயின், விழுமிது கழிவதாயினும் - சிறந்த பொருள் நீங்குவதாக இருப்பினும், நெகிழ்நூல் பூ சேர் அணையில் -நெகிழ்ந்த நூலால் கட்டிய மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையினிடத்தே இருந்து வருந்தி, பெருகவின் தொலைந்த நின் - பெரிய அழகு நீங்கிய நினது,நாள் துயர் - இக் காலத்துள்ள துயரமானது, கெட - கெடும் படி, பின் நீடலர் - பின்பும் தாமதியாமல் வருவார்.
(முடிபு) தோழி, மலையிறந்தோர் கேளாராகுவர்; கேட்பின் நீடலர்.
(கருத்து) அவர் நின் நிலையை அறிந்திலர்; அறியின் உடனே மீள்வர்.