பக்கம் எண் :


465


    1-3. மயில் வம்பமழையைக் கண்டு ஆலுதல்: "பொய்யிடி யதிர்குரல் வாய்செத் தாலும், இனமயின் மடக்கணம் போல, நினைமருள் வேனோ வாழியர் மழையே" (நற். 248:7-9.) மஞ்ஞையும் பிடவும் மடவ:" பிடவங் குருந்தொடு பிண்டி மலர, மடவ மயில்கூவ" (கைந்நிலை, 36.)

    5. பழநீர்:குறுந். 220:1, 261:1. மு.குறுந். 66; நற். 99.

(251)
  
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை ஏற்றுக் கொண்ட தலைவியை நோக்கி, "நீ சிறிதும் மாறுபாடின்றித் தலைவனை ஏற்றது என்?" என்ற தோழிக்கு,"அவன் பழியஞ்சுபவன்; ஆதலின் அவன் பழியை எடுத்துரையாது உடம்பட்டேன்" என்று தலைவி கூறியது.)
 252.   
நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த  
    
கொடிய னாகிய குன்றுகெழு நாடன் 
    
வருவதோர் காலை யின்முகந் திரியாது 
    
கடவுட் கற்பி னவனெதிர் பேணி 
5
மடவை மன்ற நீயெனக் கடவுபு  
    
துனியல் வாழி தோழி சான்றோர் 
    
புகழு முன்னர் நாணுப 
    
பழியாங் கொல்பவோ காணுங் காலே. 

என்பது தலைமகன் வரவு அறிந்த தோழி, அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து (பி-ம். கடந்து) ‘‘நன்காற்றினாய்" என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

    (வலிந்து - மாறுபட்டு (தக்க. 317), தீயன - வாயில் மறுத்தலும், பழி கூறலும் போல்வன. நன்கு - நன்மை; என்றது இன் முகம் கொண்டு எதிரேற்றதை.)

கிடங்கிற் குலபதி நக்கண்ணன் (பி-ம். கிடங்கிற் குலபதினைக் கண்ணன்.)

    (பி-ம்.) 1. ‘நெகிழக்’; 4. ‘னவனே பேணி’; 7. ‘முன்னர் நானும்’.

    (ப-ரை.) தோழி--, நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த - நெடுமையையும் திரட்சியையும் உடைய தோள்களில் உள்ள வளைகளை நெகிழச் செய்த, கொடியனாகிய குன்றுகெழு நாடன் - கொடுமையை உடையவனாகிய குன்றுகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன், வருவதோர் காலை - பரத்தையர் வீட்டினின்று வருங்காலத்தில், இன்முகம் திரியாது - இனிய முகம் வேறுபடாமல், கடவுள் கற்பின் - தெய்வத் தன்மையை உடைய கற்பினால், அவன் எதிர் பேணி - அவனை எதிர்முகமாகச் சென்று உபசரித்து,