இடைக்காடன். (பி-ம்.) 1. ‘மடவரல்வாழி’, ‘யாயினம்’; 2. ‘காலைமாரி’; 3. ‘ஆலுமாலின’;7. ‘நொதுமலர்’.
(ப-ரை.) இகுளை - தோழி, கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் - சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சி இருந்த பழைய நீரை, புது நீர் கொளீஇய - புதிய நீரைக் கொள்ளும் பொருட்டு, உகுத்தரும் - சொரிகின்ற, நொதுமல் வானத்து -அயன்மையை உடைய மேகத்தினது, முழங்கு குரல் கேட்டு - ஒலிக்கின்ற ஓசையைக் கேட்டு, மஞ்ஞை மா இனம் - மயில்களாகிய கரிய கூட்டங்கள், காலம் மாரி பெய்தென -