பக்கம் எண் :


494


    6. ஆள்வினை மருங்கிற் பிரிதல்: அகநா. 93:3, 255:7, 353:1, 379:4.

    1-6. பெரும்பொருள் பெறினும் தலைவியைப் பிரியாமை: குறுந். 300:7-8; பட். 218-20; நற். 16.

    7-8. கூற்றத்து அறனில் கோள்: "அறனில் கூற்றந் திறனின்று துணிய", "நயனில் கூற்றம்" (புறநா. 210:8, 237:9, 227:1); "ஆட்பார்த்துழலு மருளில் கூற்று" (நாலடி. 20.)

    8. இசின் படர்க்கைக்கண் வருதல்: ஐங். 73:4, 175.

    மு. அகநா. 379.

(267)
  
(தலைவன் சிறைப்புறத்தே இருப்ப, இரவுக் குறியின்கண் உண்டாகும் ஏதத்துக்கு அஞ்சுதலையும், தலைவனது வருகையின் இன்றியமையாமையையும் தோழி தலைவிக்குக் கூறி, வரைந்து கோடலே தக்கதெனப் புலப்படுத்தியது.)
 268.   
சேறி ரோவெனச் செப்பலு மாற்றாம்  
    
வருவி ரோவென வினவலும் வினவாம் 
    
யாங்குச்செய் வாங்கொ றோழி பாம்பின் 
    
பையுடை யிருந்தலை துமிக்கு மேற்றொடு 
5
நடுநா ளென்னார் வந்து 
    
நெடுமென் பணைத்தோ ளடைந்திசி னோரே. 

என்பது தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

கருவூர்ச் சேரமான் சாத்தன் (பி-ம். கருவூர்ச் சேரமான் சிரத்தன்.)

    (பி-ம்.) 2. ‘மருவிரோ’; 4. ‘மேறொடு.’

    (ப-ரை.) தோழி , பாம்பின் பையுடை இரு தலை - பாம்புகளின் படத்தை உடைய பெரிய தலையை, துமிக்கும் - துணிக்கும், ஏற்றொடு - இடியொடு கூடிய, நடுநாள் - பாதியிரவு, என்னார் - என்று எண்ணாராகி, வந்து - ஈண்டுப் போந்து. நெடு மெல்பணை தோள் - நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற நின் தோள்களை, அடைந்திசினோர் - அடைந்த தலைவர் பால், சேறிரோ என - செல்கின்றீரோ என்று, செப்பலும் ஆற்றாம் - செப்புதற்கும் வன்மை இல்லே மாயினேம்; வருவிரோ என - சென்றால் மீண்டும் வருவிரோ என்று, வினவலும் வினவாம் - கேட்டலையும் செய்யோம; யாங்கு செய்வாம் - எவ்வாறு செய்வேம்!