பக்கம் எண் :


499


    தலைமகளோடு இருந்த தலைமகன் கார்ப்பருவம் கண்டு உவந்து சொல்லியது (நம்பி. 209.)

    ஒப்புமைப் பகுதி 3. கடிப்பிகு முரசு: புறநா. 158:1; நாலடி. 100; பெருங். 1. 37:5.

    இடியின் ஒலிக்கு முரசின் முழக்கம்: குறுந். 380:1-3; முருகு. 121; குறிஞ்சிப். 49; நற். 191:10-12; பரி.4:19, 22:4; அகநா. 312:10; புறநா. 17:39, 350:4; திணை. ஐம். 23.

    5. வினை முடிந்தமையால் தலைவனுக்கு இன்பம் உண்டாதல்: "வினைமுடித் தன்ன வினியோள்" (நற். 3:8,) 5.மு.குறுந். 275:5; அகநா. 184:5.

    8. கூந்தலின் மணம்: குறுந். 2:4-5, ஒப்பு.

    கூந்தலணை: குறுந். 254:5, ஒப்பு. 6-8. "குவளை நாறுங் குவையிருங் கூந்தல்" (குறுந். 300:1); "குவளை நாறுங் கூந்தற் றேமொழி" (நற்.262:7.)

(270)
  
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு உடம்பட்டுத் தூதாக வந்த தோழியை நோக்கி, "தலைவரோடு ஒரு நாள் நட்புப் பூண்டேன்; அது பல நாளும் எனக்குத் துன்பம் தருவதாயிற்று. அவ்வொரு நாள் செய்த நட்புப் பற்றியே ஏற்றுக் கொள்வேன்" என்றது.)
 271.   
அருவி யன்ன பருவுறை சிதறி 
     
யாறுநிறை பகரு நாடனைத் தேறி 
     
உற்றது மன்னு மொருநாண் மற்றது 
     
தவப்பன் னாடோண் மயங்கி 
5
வௌவும் பண்பினோயா கின்றே. 

என்பது தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள்சொல்லியது.

அழிசி நச்சாத்தனார்.

    (பி-ம்.) 2-3. ‘தெரியுற்றுது’ 4. ‘மயக்கி’

    (ப-ரை.) தோழி, அருவி அன்ன பரு உறை சிதறி - அருவியை ஒத்த பரிய துளிகளைச் சிதறி, யாறு நிறை பகரும் - ஆறு வெள்ளத்தைக் கொண்டு ஒலிக்கும், நாடனை தேறி - நாட்டை உடைய தலைவனைத் தெளிந்து, உற்றது - அவனோடு பொருந்திய காலம், ஒரு நாள் - ஒரு நாளே ஆகும; அது - அங்ஙனம் பொருந்தியது, தவ பல் நாள் - மிகப் பல நாட்கள், தோள் மயங்கி - தோளோடு கலந்து, வௌவும் பண்பின் - அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையினை உடைய, நோய் ஆகின்று - நோயாக ஆகின்றது.