அழிசி நச்சாத்தனார். (பி-ம்.) 2-3. ‘தெரியுற்றுது’ 4. ‘மயக்கி’
(ப-ரை.) தோழி, அருவி அன்ன பரு உறை சிதறி - அருவியை ஒத்த பரிய துளிகளைச் சிதறி, யாறு நிறை பகரும் - ஆறு வெள்ளத்தைக் கொண்டு ஒலிக்கும், நாடனை தேறி - நாட்டை உடைய தலைவனைத் தெளிந்து, உற்றது - அவனோடு பொருந்திய காலம், ஒரு நாள் - ஒரு நாளே ஆகும; அது - அங்ஙனம் பொருந்தியது, தவ பல் நாள் - மிகப் பல நாட்கள், தோள் மயங்கி - தோளோடு கலந்து, வௌவும் பண்பின் - அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையினை உடைய, நோய் ஆகின்று - நோயாக ஆகின்றது.