பாண்டியன் பன்னாடு தந்தான். (பி-ம்.) 2. ‘வீழ்முறை’, ‘யூழியிற’்; 3. ‘கடிப்பிடு’; 4. ‘பெய்கினி’, ‘பெய்யினி’; 6. ‘மேவலமாகிக்’, ‘மேவுதலாகிக்’.
(ப-ரை.) யாம் , செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு - செய்வினை முற்றுவித்ததனால் நிறைவை உடைய உள்ளத்தோடு, இவளின் மேவினம் ஆகி - இத்தலைவியோடு விரும்பிப் பொருந்தினேமாகி, குவளை குறு தாள் நாள் மலர் நாறும் - சூடிய குவளையினது குறிய காம்பை உடைய அலர்ந்த செவ்வியை உடைய மலர் மணக்கின்ற, நறுமெல் கூந்தல் மெல் அணையேம் - நல்ல மெல்லிய கூந்தலாகிய மெல்லிய பாயலின் கண்ணே இருந்தேம்;