எயிற்றியனார். (பி-ம்.) 1. ‘உள்ளிற’்; 2. ‘றமிர்த’, ‘றமுத’; 3. ‘மழைபோற்’; 4. ‘மழைக்கண் மடந்தை’.
(ப-ரை.) முள் எயிறு _ முள்ளைப் போன்ற கூரிய பற்களையும், அமிழ்தம் ஊறும் அம் செ வாய் - அமிழ்தம்ஊறுகின்ற அழகிய செய்ய வாயையும், கமழ் அகில் - மணம் வீசுகின்ற அகிற் புகையும், ஆரம் - சந்தனப் புகையும், நாறும் - மணக்கின்ற, அறல் போல் கூந்தல் - கருமணலைப் போலக் கரிய கூந்தலையும், பேர் அமர் மழை கண் - பெரிய அமர்ந்த குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய, கொடிச்சி - தலைவியின், மூரல் முறுவலொடு -புன்னகையோடு, மதைஇய நோக்கு - செருக்கின பார்வையை, உள்ளி காண்பென் போல்வல் - நினைத்துப் பார்ப்பேன் போல்வேன்.
(முடிபு) கொடிச்சியின் மூரன் முறுவலொடு நோக்கினை உள்ளிக்காண்பென் போல்வல்.
(கருத்து) யான் அளவளாவிய தலைவியை இனிக் காண்டல் அரிதுபோலும்.