பக்கம் எண் :


531


(தலைவன் கூறிய பருவம் வந்தது கண்டு தலைவி வேறுபட்டாள்எனக் கவலையுற்ற தோழிக்கு, “நான் அவரை நினைந்து இரங்கினேன்அல்லேன்; என் பொருட்டுக் கவலை உடையார் போல் இவ்வூரினர்அவரைக் கொடியர் என்பதை அறிந்தே வருந்தினேன்” என்று தலைவி கூறியது.)
 289.    
வளர்பிறை போல வழிவழிப் பெருகி  
    
இறைவளை நெகிழ்த்த வெவ்வ நோயொடு 
    
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய் 
    
உழைய ரன்மையி னுழப்ப தன்றியும் 
5
மழையுந் தோழி மான்றுபட் டன்றே  
    
பட்ட மாரி படாஅக் கண்ணும் 
    
அவர்திறத் திரங்கு நம்மினும்  
    
நந்திறத் திரங்குமிவ் வழுங்க லூரே. 

என்பது காலங்கண்டு வேறுபட்டாள் எனக் கவன்ற தோழிக்கு, “காலத்துவந்திலரென்று வேறுபட்டேன் அல்லேன். அவரைப் புறத்தார் கொடியர்என்று கூறக் கேட்டு வேறுபட்டேன்” என்று தலைமகள் சொல்லியது.

பெருங்கண்ணன்.

     (பி-ம்) 1. ‘வழிவழிப் பெருகி;’ 6. ‘கண்ணம்’

     (ப-ரை.) தோழி--, வளர் பிறை போல - பூருவ பக்கத்துவளர்கின்ற பிறையைப் போல, வழி வழி பெருகி - மேலும்மேலும் பெருக்கத்தை அடைந்து, இறைவளை நெகிழ்த்த எவ்வம் நோயொடு - தோட்சந்தில் அணிந்த வளையை நெகிழச் செய்த துன்பத்தைத் தரும் காம நோயினால், குழைபிசைந்தனையேம் ஆகி - தளிரைக் கசக்கினாற் போன்ற நிலையை உடையேமாகி, சாஅய் - மெலிந்து, உழையர் அன்மையின் - அந் நோயைத் தீர்ப்பதற்குரிய தலைவர்பக்கத்தில் உள்ளார் அல்லாமையினால், உழப்பது அன்றியும் - நாம் துன்பப்படுவது அல்லாமலும், மழையும் - இம் மழையும், மான்று பட்டன்று - மயங்கிப் பெய்தது, பட்டமாரி படாஅ கண்ணும் - அங்ஙனம் பெய்த மழை பெய்வதற்கு முன்னரே, இ அழுங்கல் ஊர் - இந்தக் கலக்கத்தை உடைய ஊரில் உள்ளார், அவர் திறத்து இரங்கும் நம்மினும் - அவர் பொருட்டு வருந்துகின்ற நம்மைக் காட்டிலும் மிக, நம் திறத்து இரங்கும் - நம்மாட்டு இரங்குவர்.

     (முடிபு) தோழி, அனையேமாகிச் சாஅய் உழப்பதன்றியும் மழையும்மான்றுபட்டன்று; படாஅக் கண்ணும் ஊர் இரங்கும்.