பக்கம் எண் :


534


     இது படர்க்கையிற் கூறினும் தோழியைக் கருதியதே ஆதலின் முன்னிலைப் புறமொழி.

     கற்பொரு சிறுநுரையெனற்பாலது எதுகை நோக்கிக் கல்பொருசிறுநுரை என நின்றது. நுரை கல்லில் மோதுந்தோறும் சிறிது சிறிதாகக்கரைதலைப் போலத் தலைவர் பிரிவை எண்ணுந்தோறும் உயிர் தேய்ந்தொழியும் என்க. இவ்வுவமையின் சிறப்பினால் இச் செய்யுள் இயற்றியநல்லிசைப் புலவர் ‘கல் பொரு சிறுநுரையார்’ என்னும் பெயர் பெற்றார்.

     இல்லாகுதல், “இல்லாகி” (குறள், 479.) மெல்ல மெல்ல இல்லாகுதல்சாக்காடென்னும் மெய்ப்பாடு.

     தாம், ஓ, ஏ: அசை நிலைகள்.

     மேற்கோளாட்சி மு. அறமும் பொருளும் செய்வதனால் புறத்து உறைதலால் தலைவனைத் தலைவி நீங்கும் காலம் பெரிதாகலின் அதற்குச் சுழற்சி மிக்க வேட்கை மிகுதி நிகழ்ந்த இடத்துத் தெருட்டும் தோழிக்குத் தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. காமந் தாங்குதல்: குறுந். 241:1. 1-2. “யாங் கண்ணிற் காண நகுப வறிவில்லார், யாம்பட்ட தாம்படா வாறு” (குறள். 1140.)

     காமம் தாங்க மாட்டாமை: “பொறைநில்லா நோய்” (கலி. 3:4.)

     6. இல்லாகுதும்: “நாமில மாகுத லறிதும்” (நற். 299:6.)

     5-6. மெல்ல மெல்ல அழிதல்: “ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய, தேய்புரிப் பழங்காயிறு போல, வீவது கொல்லென் வருந்திய வுடம்பே” (நற். 284:9-11.)

    மு. குறுந். 152.

(290)
  
(தலைவன் பாங்கனுக்குத் தலைவி இவ்விடத்தினள், இவ்வியல்பினள் என்று கூறியது.)
 291.    
சுடுபுன மருங்கிற் கலித்த வேனற் 
    
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே 
    
இசையி னிசையா வின்பா ணித்தே 
    
கிளியவள் விளியென வெழலொல் லாவே 
5
அதுபுலந் தழுத கண்ணே சாரற் 
    
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை 
    
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத் 
    
தண்டுளிக் கேற்ற மலர்போன் றனவே. 

என்பது பாங்கற்கு உரைத்தது.

கபிலர்.

     (பி-ம்.) 1. ‘சுடும்புன மருங்கிற’்; 3. ‘இசைஇ யின்னிசையாய்’,‘விழவொல்லாவே’; 7. ‘பல்லிதழ்க் கலைஇய’; 8. ‘மலர் போன்றவ்வே’.