பக்கம் எண் :


556


     7. அலவன் ஆட்டல்: குறுந். 316:56; பட். 101: நற். 363:10; ஐங். 197:1.

     5-7. தலைவனும் தலைவியும் புன்னைநிழலில் அளவளாவுதல்: குறுந். 123:3-4, ஒப்பு. 299:3-4, ஒப்பு.

  
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் ஆற்றாளெனக்கருதிக் கவன்ற தோழியை நோக்கித் தலைவி, “அன்று இனிதாயிருந்தநட்பைத் தலைவனோடு செய்தேம்; இப்போது அந்நட்பு நமக்கே பகையாய் முடிந்தது” என்று கூறியது.)
 304.    
கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி 
    
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் 
    
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக் 
    
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய 
5   
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து 
    
வெண்டோ டிரியும் வீததை கானற் 
    
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு 
    
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே.  

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது

கணக்காயன் தத்தன்.

     (பி-ம்.) 1. ‘தொல்வினைப்’; 2. ‘முனிவெதிர்’; 3. ‘தாங்கருவாய் நீர்’.

     (ப-ரை.) தோழி, கொல் வினை பொலிந்த - கொல்லுந்தொழிலிற் பொலிவு பெற்ற, கூர்வாய் - கூரிய முகத்தையுடைய, எறி உளி - எறிகின்ற உளியை, முகம் படமடுத்த -தன்னுடைய முகத்தின்கண் அமையும்படி பொருத்தப்பெற்ற, முளி வெதிர் நோன் காழ் - உலர்ந்த மூங்கிலின்வலிய காம்பை, தாங்கு அருநீர் சுரத்து எறிந்து - தாங்குதற்கரிய நீரையுடைய வழியின்கண் எறிந்து, வாங்கு - கைக்கொள்ளும், விசை கொடு திமில் பரதவர் - வேகத்தையுடையவளைந்த மீன் படகையுடைய பரதவர், கோடு மீன் எறிய -கொம்பையுடைய சுறா மீனை எறிய, நெடு கரை இருந்த -நெடிய கரையினிடத்தே இருந்த, குறு கால் அன்னத்துவெள் தோடு - குறிய கால்களையுடைய அன்னப்பறவைகளின் வெள்ளிய தொகுதி, இரியும் - கெட்டு ஓடும், வீததைகானல் - மலர்கள் நெருங்கிய சோலையையும், கைதை -தாழையையும், அம் தண் புனல் - அழகிய தண்ணிய