சேந்தன்கீரன். (பி-ம்.) 1. ‘அலர்யாங் கொல்வ’; 4. ‘கண்டன்றோவிலனே’.
(ப-ரை.) தோழி--, பெரு கடல் - பெரிய கடலினது,புலவு நாறு அகல் துறை - புலால் நாற்றம் வீசும் அகன்றதுறையின் கண்ணே, வலவன் தாங்கவும் - பாகன் தடுக்கவும்,நில்லாது கழிந்த - நில்லாமற் சென்ற, கல் என் கடு தேர் -கல்லென ஆரவாரம் செய்யும் விரைந்த தலைவனது தேரை,யான் கண்டனனோ இலனோ - யான் கண்டேனோ இல்லையோ, பால் நாள் - நடு இரவின் கண், ஓங்கல் வெள்மணல் தாழ்ந்த புன்னை - உயர்ச்சியையுடைய வெள்ளியமணலினிடத்துத் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தினது,தாது சேர் நிகர் மலர்கொய்யும் - மகரந்தம் சேர்ந்த ஒளியை