ஒப்புமைப் பகுதி 1-3. களை பறிப்போர் அக்களையை வரம்பின்மேல் எறிதல்; “குறுந ரிட்ட குவளையம் போதொடு - களைபறிப்பார் வரம்பிலிட்ட குவளைப் பூவுடனே”
(சிலப். 10:86, அடியார்.); “கடுங்கை வயலுழவர் காலைத் தடிய, மடங்கி யரியுண்ட நீலம் - தடஞ்சேரா, நீளரிமேற் கண்படுக்கும்”
(தண்டி. 24, மேற்.); “கடைசியர் களைதரு நீலம், செய்வரம் பரும்பு”
(திருவிசைப்பா, கருவூர்த்தேவர், கோயில், 2); “கெட்ட சிறுமருங்கிற் கீழ்மகளிர் நீள்வரம்பி, லிட்ட பசுங்குவளை”
(நள. சுயம்வர. 67; கம்ப. நாடு. 10, அகலிகை. 65.) 5-6. நெய்தல் செறுவிற்பூத்தல்; “நீர்ச்செறுவி னீணெய்தற், பூ” (பட். 11-2); “வண்டுமூசு நெய்த னெல்லிடை மலரும், அரியலங்கழனி” (நற். 190:5-6.)
நெய்தற் களை: ‘‘நெல்லரி தொழுவர் கூர்வா ளுற்றெனப், பல்லிதழ்தயங்கிய கூம்பா நெய்தல்’’ (நற். 195:6-7) ;“தண்ணறு நெய்தற்றளையவிழ்வான்பூ, வெண்ணெ லரிநர் மாற்றின ரறுக்கும்” (ஐங். 190:1-2.)
7. தலைவன் இன்னாதன செய்தல்: குறுந். 288:3-4, 397:6.
8. தலைவனது இன்றியமையாமை; “நீரின் றமையா வுலகம் போலத், தம்மின் றமையா நந்நயந் தருளி”, “தம்மல தில்லா நந்நயந்தருளி” (நற். 1:6- 7, 189:1); “நின்னல தில்லா விவள்” (ஐங். 179:4); “நின்னின்றிமைப்புவரை வாழாண் மடவோள்” (கலி. 21:12-3.)
6-8. தலைவன் இன்னா செயினும் தலைவி அவனை விரும்புதல்:(குறுந். 397:4-7); “நல்கா யாயினு நயனில செய்யினும், நின்வழிப்படூஉமென் றோழி” (நற். 247:6-7); “இடர்களையா ரேனு மெமக்கிரங்காரேனும், படரு நெறிபணியா ரேனும் - சுடருருவில், என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க், கன்பறா தென்னெஞ் சவர்க்கு” (காரைக் காலம்மையார் அற்புதத் திருவந்தாதி, 2.); “கண்டா ரிகழ்வனவேகாதலன்றான் செய்திடினும், கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல்” (பெருமாள் திருமொழி.)
(309)
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தன்னை வற்புறுத்திய தோழியின்பாற் சினமுற்று, “என் நிலையைத் தலைவருக்குஉரைப்பாருளராயின் என் உயிர் உளதாகும்” என்று கூறியது.)