பக்கம் எண் :


574


முயக்கத்தையுடைய அகற்சியையுடைய மார்பனே' (கலி. 8:23, 100:21, ந.) ஞெமுங்கத் தழுவுதற்கென ஒரு சொல் வருவிக்க.

     ஒப்புமைப் பகுதி 1-2. கமஞ்சூலெழிலி: "கமஞ்சூன் மாமழை" (முருகு. 7; நற். 347: 1; அகநா. 134:2.)

     5. பி-ம். இன்னுறல்: அகநா. 399:3.

     6. சுரனிறந்தோர் : குறுந். 211:7, 215:7, 260:8.

(314)
  
("தலைவன் வரைவிடை வைத்துப் பிரியுங்காலத்தில் ஆற்றும்ஆற்றல் உடையையோ?" என்று வினவிய தோழிக்கு, "அவனதுவிருப்பப்படியே ஒழுகும் தன்மையினேனாதலின் ஆற்றுவேன்" என்றுதலைவி கூறியது.)
 315 
எழுதரு மதியங் கடற்கண் டாஅங்  
  
கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்  
  
ஞாயி றனையன் றோழி  
  
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே.  

என்பது வரைவிடை யாற்றகிற்றியோ என்ற (பி-ம். வேறுபடுகின்றாயென்ற) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மதுரை வேளாதத்தன் (பி-ம். தும்பிசேர்கீரன்.)

     (பி-ம்.) 3. ‘றனையனென் றோழி’.

     (ப-ரை.) தோழி--, எழுதரு மதியம் - உதயமாகின்றசந்திரன், கடல் கண்டாஅங்கு - கடலினிடத்தே காணப்பட்டாற் போல, ஒழுகு வெள் அருவி - ஓடிவருகின்றவெள்ளிய அருவியையுடைய, ஓங்கு மலைநாடன் - உயர்ந்தமலைநாட்டையுடைய தலைவன், ஞாயிறு அனையன் - சூரியனைப் போன்றவன்; என்பெரு பணை தோள் - என்பெரிய மூங்கிலைப் போன்ற தோள்கள், நெருஞ்சி அனைய - நெருஞ்சி மலர்களைப் போன்றன.

     (முடிபு) தோழி, மலைநாடன் ஞாயிறனையன்; என் தோள் நெருஞ்சியனைய.

     (கருத்து) தலைவன் கருதுவதையே யானும் கருதி ஆற்றியிருப்பேன்.

     (வி-ரை.) மதியமென்றது இங்கே பிறையை. அருவிக்குப் பிறையும்மலைக்குக் கடலும் உவமைகள். மதியத்தின் நிழல் கார்க்கடலில் நீண்டுதோன்றுதல் அருவியைப் போலும். நெருஞ்சிமலர் ஞாயிற்றையே நோக்கிநிற்கும் இயல்பினது; ஞாயிறு கீழ்த்திசையிருப்பின் கிழக்கு நோக்கியும்மேற்றிசைச் செல்லின் மேற்கு நோக்கியும் உச்சி வானத்திலிருப்பின் உச்சியை நோக்கியும் நிற்பது. ஞாயிற்றை நோக்கிய நெருஞ்சிபோலத் தலைவனை என்தோள் நோக்கி நிற்குமென்றாள்.