பக்கம் எண் :


575


தோள்மேல் வைத்துக்கூறினும் ‘அவனது கருத்தின்படியே யான்ஒழுகுவேன்' என்ற தனது இயல்பையே கருதினாள்.

     மேற்கோளாட்சி மு. தலைமகள் பிரிவுடன்பட்டது (தமிழ்நெறி. 24.)

     ஒப்புமைப் பகுதி 1. கடற் கண்டாங்கு: முருகு. 2.

     2-3. தலைவனுக்கு ஞாயிறு: "ஞாயி றனையன் யானே" (தமிழ்நெறி.மேற். 55.)

     4. பணைத்தோள்: குறுந். 268:6, ஒப்பு.

     3-4. நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி நிற்றல்: "சுடரொடு திரிதருநெருஞ்சி போல" (அகநா.336:18); "பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ,ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங்கு" (புறநா. 155:4-5); "செங்கதிர்விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப், பொன்புனை மலர்" (பெருங். 2.4:14-5); "வெஞ்சுடர் நோக்கு நெருஞ்சியில்" (பாண்டிக்.); "நீள்சுடர் நெறியைநோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல்" (சீவக. 461); "ஏழுளைப்புரவியொ டெழுகதிர் நோக்கிய, சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூ வென்ன"(கல். 65:14-5); "நிரம்பு கதிர்நேர் நெருஞ்சியெனத் தன்பால், திரும்புவிழியாயமொடு சென்றாள்" (வெங்கையுலா. 352.)

(315)
  
(வரைவிடை வேறுபட்ட தன்னை வினவிய தோழிக்கு, "தலைவன்இன்னும் வந்திலன்; என் துன்பத்தை அன்னையறியின் உயிர் நீப்பேன்.அங்ஙனம் அறிவாளோவென அஞ்சி வேறுபட்டேன்" என்பதுபடத்தலைவி கூறியது.)
 316.    
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்  
    
நோய்மலி வருத்த மன்னை யறியின்  
    
உளெனோ வாழி தோழி விளியா  
    
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை  
5
ஓரை மகளி ரோராங் காட்ட  
    
ஆய்ந்த வலவன் றுன்புறு துனைபரி  
    
ஓங்குவரல் விரிதிரை களையும்  
    
துறைவன் சொல்லோ பிறவா யினவே. 

     (சில பிரதிகளில் இப்பாட்டு இல்லை.)

என்பது "வரைவிடை வேறுபடுகின்றாய்" என்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

தும்பிசேர் கீரன்.

     (பி-ம்.) 1. ‘நிற்பவும்’ 3. ‘உளெனே’ 4. ‘பொறாவிரவு’ 5. ‘ஓராங்குக்’ 6-7. ‘துனைப்பரி’, ‘வோங்கு’ 7. ‘ஓங்குவரலருவி விரிதிரை’ 8. ‘சொன்னனி பிறவாயினவே’.

     (ப-ரை.) தோழி--, விளியாது - கெடாமல், உரவுகடல் பொருத - வலியையுடைய கடலால் அலைக்கப்பட்ட,