(வரைவிடை வேறுபட்ட தன்னை வினவிய தோழிக்கு, "தலைவன்இன்னும் வந்திலன்; என் துன்பத்தை அன்னையறியின் உயிர் நீப்பேன்.அங்ஙனம் அறிவாளோவென அஞ்சி வேறுபட்டேன்" என்பதுபடத்தலைவி கூறியது.)
316.
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்த மன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
5
ஓரை மகளி ரோராங் காட்ட
ஆய்ந்த வலவன் றுன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே.
(சில பிரதிகளில் இப்பாட்டு இல்லை.)
என்பது "வரைவிடை வேறுபடுகின்றாய்" என்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.