பக்கம் எண் :


577


     3. பி-ம். உளெனே வாழி தோழி: நற். 199:5.

     வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு.

     4. "உரவுத்திரை பொருத திணிமண லடைகரை" (குறுந். 175: 2);"உரவுத்திரை, அடுங்கரை" (குறிஞ்சிப். 178-9.)

     மணலடைகரை: "மோட்டுமண லடைகரை" (அகநா. 10:11.)

     5. ஓரை மகளிர்: குறுந். 48:3, ஒப்பு; நற். 155:1, 398:5; கலி. 75:4.

     ஓராங்கு: குறுந்.38:5, 257:1.

     5-6. மகளிர் அலவனாட்டுதல்: குறுந். 303:7, ஒப்பு.

     4-6. மணலடைகரையில் அலவன் ஆட்டுதல்: "பன்மலர் வேய்ந்தநலம்பெறு கோதையள், திணிமண லடைகரை யலவ னாட்டி" (அகநா.280:2-3.)

     8. மு. ஐங். 162:4.

(316)
  
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை நோக்கி,"தலைவன் குறித்த பருவத்தே வருவான்" என்று தோழி கூறி வற்புறுத்தியது.)
 317.   
புரிமட மரையான் கருநரை நல்லேறு  
    
தீம்புளி நெல்லி மாந்தி யயலது  
    
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்  
    
தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்  
5
நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக 
    
வடபுல வாடைக் கழிமழை 
    
தென்புலம் படருத் தண்பனி நாளே.  

என்பது பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

மதுரைக் கண்டரதத்தன் (பி-ம். மதுரைக் கண்டாகததன்.)

     (பி-ம்.) 3. ‘தேம்பிய மாமலர்’.

     (ப-ரை.) புரிமடம் மரையான் - விரும்புகின்ற மடப்பத்தையுடைய மரையானினது, கருநரை நல் ஏறு - கருமையையும் பெருமையையுமுடைய நல்ல ஆண், தீ புளிநெல்லி மாந்தி - இனிய புளிப்பையுடைய நெல்லிக்காயைத்தின்று, அயலது - அருகில் உள்ளதாகிய, தேம்பாய் மாமலர் - தேன் பரவிய அழகிய மலர்கள், நடுங்க வெய்து உயிர்த்து - நடுங்கும்படி வெப்பமாகிய மூச்சை விட்டு, ஓங்கு மலைபசு சுனை - உயர்ந்த மலையினிடத்துள்ள பசிய சுனைநீரை,பருகும் நாடன் - உண்ணுகின்ற நாட்டையுடைய தலைவன்,