பக்கம் எண் :


578


கைம்மிக - மிகும்படி, வடபுலம் வாடைக்கு - வடதிசையினின்றும் வரும் வாடைக்காற்றுக்கு, அழிமழை - அழிந்தமேகம், தென் புலம் படரும் - தென்திசையை நோக்கிச்செல்லும், தண்பனி நாள் - தண்ணிய பனிப்பருவத்தில்,நம்மை விட்டு அமையுமோ - இன்றியமையாத நம்மைப்பிரிந்து பொருந்துவானோ? பொருந்தான்.

     (முடிபு) நாடன், தண்பனி நாளில் நம்மைவிட்டு அமையுமோ?

     (கருத்து) தலைவன் குறித்த பருவத்தில் வந்துவிடுவான்.

     (வி-ரை.) நரை - பெருமை (மதுரைக். 63, ந.); வெண்மையுமாம்.முதலிற் புளிப்பும் அப்பால் இனிமையும் தோற்றுதலின் தீம்புளி நெல்லியென்றாள். நெல்லியைத் தின்று நீர்குடிக்குங்கால் இன்சுவை தோற்றும்.

     காட்டிலுள்ள மரையா முதலியன மலரால் மூடப்பட்ட சுனைநீரைக்குடிக்கையில் அம்மலர்களைத் தம் மூச்சுக் காற்றால் விலகச் செய்து அப்பால் நீரைக்குடித்தல் வழக்கம்;

  
"... ... .. கொழுங்கொடி முல்லை 
  
 ஆர்கழல் புதுப்பூ வுயிர்ப்பி னீக்கித் 
  
 தெள்ளறல் பருகிய திரிமருப் பெழிற்கலை"         (அகநா. 184:9-11.) 

    வாடை - வடகாற்று; அது வீசியதால் மேகம் தென்றிசையிற்படர்ந்தது.

     மற்று, ஏகாரங்கள், கை: அசை நிலைகள்.

     (மேற்கோளாட்சி) 1. நரை யென்பது பெருமை யென்னும் பொருளில் வந்தது(மதுரைக். 63-4, ந.)

     ஒப்புமைப் பகுதி 2. தீம்புளி நெல்லி: குறுந். 201:4, ஒப்பு.

     1-2. மரையா நெல்லிப் புளியை மாந்துதல்: குறுந். 235:3-4, ஒப்பு.

     3-4. சுனைநீரைப் பூ மூடியிருத்தல்: குறுந். 56:2.

     4-5. நாடன் நம்மை விட்டமையுமோ: "அமையே னின்னையானகன்ற ஞான்றே" (தமிழ்நெறி. 1 மேற்.)

     6-7. மழை தென்புலம் படர்தல்: "பெரும்பெயல் பொழிந்த தொழிலவெழிலி, தெற்கேர் பிரங்கு மற்சிரக் காலையும், அரிதே காதலர்ப் பிரிதல்","தன்றொழில் வாய்த்த வின்குர லெழிலி, தென்புல மருங்கிற் சென்றற்றாங்கு" (நற். 5:5-7, 153:4-5); "தெற்கேர்பு, கழிமழை பொழிந்த பொழுதுகொ ளமையத்து", "வாடை வைகறை, விசும்புரிவதுபோல் வியலிடத் தொழுகி, மங்குன் மாமழை தென்புலம் படரும்" (அகநா. 13:12-3, 24:6-8.)

  
(317)
(தலைவன் சிறைப்புறத்தே நிற்பத்தோழிக்குக் கூறுவாளாய்,"தலைவன் பிரியேனென்று சூள்செய்தான். அதனைக் காப்பாற்றுதல்அவன் கடன். அதனை அவனே அறியவேண்டுமன்றி யான் கூறுதலாற்பயனில்லை" என்று தலைவி கூறி விரைவில் வரைய வேண்டுமென்னும்குறிப்பை உணர்த்தியது.)